search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில்  தொழில் முனைவோர் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம்
    X

    ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம்

    • ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு,கல்லுரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

    ஓசூர்,

    ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,கல்லுரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

    இதில், ஜெஸ்பர் ஆப்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனர் புஷ்ப ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வளர்ச்சி, பயிற்சியின் பயன்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் விழாவில், துறை தலைவர்கள் புவியரசு, சுபா, திவாகர், தினேஷ் பாபு, நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில்,மின்னியல் துறை தலைவர் பாலாஜி பிரகாஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×