என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திரவுபதி அம்மன் கோவிலில் ஐயப்பன் சிலை உற்சவர் விழா திரவுபதி அம்மன் கோவிலில் ஐயப்பன் சிலை உற்சவர் விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/11/18/1983489-8.webp)
ஐயப்பன் சிலை உற்சவர் விழா நடந்தது.
திரவுபதி அம்மன் கோவிலில் ஐயப்பன் சிலை உற்சவர் விழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சாமி புறப்பட்டு 108 சிவாலயம் வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் திருப்பாலைத்துறையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 108 கிலோ புதிய ஐம்பொன் ஐயப்பன் சிலை உற்சவர் விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. அதுசமயம் ஐயப்பனுக்கு சிறப்பு நெய் அபிஷேகம் வீதியுலா மற்றும் படிபூஜை நடைப்பெற்றது.
தொடர்ந்து ஐயப்பன் சாமிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், சாஸ்தாஹோமம் நடைப்பெற்றது.
இதையடுத்து ஐயப்பன் சாமி அலங்காரத்துடன் செண்டை மேளம் முழக்கத்துடன் வானவேடிக்கையுடன் வீதியுலா காட்சி நடைபெற்றது. சாமி புறப்பட்டு 108 சிவாலயம் வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அங்கிருந்து புறப்பட்டு சீனிவாச பெருமாள் கோவில் 4 ராஜ வீதிகள் வழியாக பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவில் வந்தடைந்தது. இரவு சிறப்பு படி பூஜைகளும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாபநாசம் ஐயப்பன் யாத்திரை குழுவினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .