search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் பலி; வாலிபர் கைது
    X

    மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் பலி; வாலிபர் கைது

    • வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த தர்சன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
    • பலத்த காயம டைந்த தர்சன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே ஆக்கினாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ் மகன் தர்சன் (வயது 2). இவர் கடந்த 2-ந் தேதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று, பொன்னாவரையை சேர்ந்த வரதராஜன் மகன் விக்னேஷ (30) என்பவர் மேலஉத்தமநல்லூரிலிருந்து பொன்னாவரைக்கு மோட்டார் சைக்கிளில் ஆக்கினாதபுரம் வழியாக வந்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில், வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த தர்சன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் பலத்த காயம டைந்த தர்சன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து, திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்பர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

    Next Story
    ×