என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரவணசமுத்திரம் ஊராட்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
- மருத்துவர் சந்தியா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை செய்தார்.
- முகாமில் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் நெல்லை கேன்சர் சென்டர் மருத்துவர் சந்தியா கலந்து கொண்டு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை செய்தார். முகாமில் புற்றுநோய் தடுக்கும் விதமாக விதமாக பிளாஸ்டிக் பை ஒழித்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி தலைவர் முகம்மது உசேன், துணை தலைவர் ராமலெட்சுமி சங்கிலி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவனம் செய்திருந்தது.
Next Story