search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மணக்குடி பொறையான் கோவிலில் தேர் திருவிழா
    X

    தேர் திருவிழா நடந்தது.

    மணக்குடி பொறையான் கோவிலில் தேர் திருவிழா

    • 2 சிறிய தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகளில் உலா வந்தனர்.
    • பக்தர்கள் தங்கள் வீட்டு வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லநாயகி அம்மன் பொறையான் திருக்கோயிலில் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் நடைபெறும் உற்சவ திருவிழா பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

    அதில் நேற்று முன்தினம் மாலையில் இரண்டு சிறிய தேர்கள் பக்தர்கள் தோளில் சுமந்துக் கொண்டு மணக்குடி கிராமம் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தது.

    பக்தர்கள் வீடுகள் தோறும் வாசலில் குத்து விளக்குகள் ஏற்றி வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீனம் நிர்வாகிகள், மணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, துணைத் தலைவர், வார்டு உறுப்பி னர்கள், வள்ளலார் கோயில் கண்காணிப்பாளர் அகோரம், மற்றும் வெங்கட்ராமன், குமார், ரவி, சீனிவாசன், மற்றும் குலதெய்வ குடும்பத்தார்கள், மனக்குடி கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×