search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புலிவலம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம்- கலெக்டர் திறந்து வைத்தார்
    X

    பள்ளி கட்டிடத்தை கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்தார்.

    புலிவலம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம்- கலெக்டர் திறந்து வைத்தார்

    • குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டிடம் ரூ.13.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
    • சமுக பொறுப்புணர்வு திட்டத்தில் நிறைய சேவைகள் செய்து வருகிறோம்.

    திருத்துறைப்பூண்டி:

    ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் புலிவலத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டிடம் சுமார் 13.7 லட்சம் மதிப்பீல், திருவாரூர் புலிவலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய பள்ளி கட்டிடத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்து, சிறப்பு குழந்தைகளின் பயிற்சி பற்றியும் அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இங்கு பயிற்சி பெற்ற பள்ளிக்குழந்தைகளை மற்ற பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு மேம்படுத்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை வகித்தார்.

    திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதாஓ.என்.ஜி.சி.குழுமபொது மேலாளர் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பேசிய ஓ.என்.ஜி.சி.குழும பொது மேலாளர் மாறன் இது மாதிரி பள்ளிகள் கட்டியதில் எங்கள் நிறுவனம் உண்மை யில் பெருமை கொள்கிறது.

    இந்த வாய்ப்பை அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.சமுக பொறுப்புணர்வு திட்டத்தில் நிறைய சேவைகள் செய்து வருகிறோம்.

    இன்னும் சமுக பணியை செய்யவிருக்கிறோம் என்பதை தெரிவிப்பதோடு மாவட்டஒன்றிய நிர்வாகத்திற்கும்பள்ளி கல்வித்துறைக்கும்நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தரராஜன், வட்டாட்சியர் நக்கீரன்,வட்டா ரவளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்ரமனியன் ஓ.என்.ஜி.சிபொதுமேலாளர் சரவணன், பிரபாகரன்சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி விஜய்கண்ணன் முதன்மை பொறியாளர் மாரிநலநாதன், சி.எஸ். ஆர். திட்ட ஒருங்கிணை ப்பாளர் முருகானந்தம்புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தவுலத் இக்பால், ஊராட்சி துணைத்தலைவர் மக்கள் கார்த்தி கல்வி அலுவலர்கள் இளங்கோவன், செல்வம் மேற்பார்வையாளர் சாந்தி,மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் புவனாபயிற்சி ஆசிரியர்கள் சாந்தி ,மது மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×