என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் அவதூறு: போலீஸ் நிலையத்தில் பா.ம.க.வினர் முற்றுகை
- பா.ம.க. வினர் பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- இது சம்பந்தமாக நிர்வாகிகள் தட்டி கேட்ட தற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடலூர்:
பாமக நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்க ளில் தொடர்ந்து கடலூர் பிள்ளையார் மேடு சேர்ந்த சிவா என்பவர் அவதூறு பரப்பி வந்த நிலையில் பா.ம.க. வினர் பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமை யில் நிர்வாகிகள் திரண்ட னர். பின்னர் கடலூர் முதுநகர் போலீஸ் நிலை யத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பி ரண்டு கரிக்கால் பாரிசங்கர் மற்றும் போலீசார் போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், பிள்ளையார் மேடு செல்வ சிவா என்பவர் பாமக நிர்வாகிகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதோடு பா.ம.க. விற்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.
இது சம்பந்தமாக நிர்வாகிகள் தட்டி கேட்ட தற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். இது குறித்து உரிய நடவடி க்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தர வாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சண்.முத்து கிருஷ்ணன் கொடுத்த புகா ரின் பேரில் பிள்ளையார் மேடு சேர்ந்த சிவா என்ப வரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்