search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    பாவூர்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

    • பாவூர்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தென்காசி:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தங்கம் தலைமை தாங்கினார். முருகன், ஜெகநாதன், சுமன், இசக்கிமுத்து, ஜோதி உலகம்மாள், நாகராஜன், பாண்டியராஜன் மூக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குணசீலன், சி.ஐ.டி.யு. பீடிதொழிலாளர் சங்க இணை செயலாளர் ஆரியமுல்லை கற்பகவல்லி, அய்யாச்சாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சொரணம் ஆகியோரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கீழப்பாவூர் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பனிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர்.

    Next Story
    ×