search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடைக்கால கலை பயிற்சி முகாம்
    X

    கோடைக்கால கலை பயிற்சி முகாம்

    • மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க கலை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
    • பயிற்சி முடிந்தவுடன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும்

    ஈரோடு:

    தமிழ்நாடு முழுவதும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

    கோவை மண்ட லத்தின் கீழ் செயல்படும் ஈரோடு மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் பரத நாட்டியம், குரலிசை, கீபோர்டு மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில்

    5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஈரோடு பவானி சாலை பி.பெ.அக்ரஹாரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைப்பள்ளியில் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வருகின்றது.

    மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்க ளின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு இசைப்பள்ளியில்

    வருகிற 1- தேதி முதல் 20-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பரதநாட்டியம், குரலிசை, கீபோர்டு மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு 9842780608 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடிந்தவுடன் நிறைவு நாள் அன்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்க ப்படும் எனவும்,

    இவ்வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×