search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
    X

    தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

    • முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
    • விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

    சீர்காழி:

    சீர்காழி மின்வாரிய செயற்பொறியா ளர் லதா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது சீர்காழி கோட்டத்தில் விவசாயம் மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்ப முள்ள விண்ணப்பதா ரர்கள் விரைந்து விவசாயம் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடை முறைப்படு த்தப்பட்டு விவசாயம் மின் இணைப்பு கள் வழங்கப்பட்டு வருகிறது.தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளு க்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயி களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாயம் மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாயம் மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பம் உள்ள விவசாய மக்கள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாயம் மின் இணைப்பு பெற தங்கள் பகுதியில் செயற்பொ றி யாளரை தொடர்பு கொள்ளு மாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு ள்ளது.

    Next Story
    ×