என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 4 ஜோடிகளுக்கு திருமணத்தை கலெக்டர் பூங்கொடி நடத்தி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

- இன்று 4 ஜோடிகளுக்கு திருமணங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நடத்தி வைத்தார்
- மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் இன்று 4 ஜோடிகளுக்கு திரு மணங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நடத்தி வைத்து ரூ.2.19 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது,
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்த ங்கிய ஏழை, எளிய பொது மக்களின் ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்துக்களின் திருமணத்திற்கு தேவையான 4 கிராமில் திருமாங்கல்யம், மணமகன் ஆடை ரூ.1000, மணகள் ஆடை ரூ.2,000, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2,000, மாலை, புஷ்பம் ரூ.1,000, பீரோ ரூ.7,800, கட்டில் ரூ.7500, மெத்தை ரூ.2,200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1,000, ஒரு மிக்சி ரூ.1,490, பூஜை பொரு ட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3,640 என மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக மேலும் 100 ஜோடிகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்கு திருமண விழா நடத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட த்தில் ஏற்கனவே 2 கட்டமாக இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதனை த்தொடர்ந்து திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 4 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.2.19 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேயர் இளமதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலை வர் சுப்பிரமணியன், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேலுச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.