search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி ஆசிரியை திடீர் தற்கொலை
    X

    அரசு பள்ளி ஆசிரியை திடீர் தற்கொலை

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
    • பொத்தனூருக்கு வந்து கடந்த 6 நாட்களாக தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

    பரமத்தி வேலூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த வர் ராஜாங்கம் (வயது 55). இவரது மனைவி உமாதேவி( 50 ). இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இவரது தாயார் வீடான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூருக்கு வந்து கடந்த 6 நாட்களாக தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

    நேற்று மாலை கழிவறைக்கு சென்ற உமாதேவி கழிவறையில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார் . வெகுநேரமாகியும் வராதால் அவரது பெற்றோர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தபோது கழிவறை தாழிட்டு இருந்தது. அப்போது கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உமாதேவி இறந்து விட்டதாக தெரிவித்த னர். அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×