என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த திருநங்கை கைது

- போலீசார் கட்சூர்மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை ஆந்திரா தமிழக எல்லையில் உள்ளது. இந்த கிராமம் வழியாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி செல்வதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் படி பென்னாலூர் பேட்டை போலீசார் கட்சூர்மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக நிற்காமல் சென்ற வரை போலீசார் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர்.
மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்தது திருவள்ளூர் அடுத்த காக்கலூர் கிராமத்தை சேர்ந்த ஹரிணி (33) என்ற திருநங்கை என்று தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை சென்னையில் விற்பனை செய்ய முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.