என் மலர்
உள்ளூர் செய்திகள்

புனித மிக்கேல் அதிதூதர் உருவம் பொறித்த கொடியை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா எடுத்துவந்த காட்சி.
தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா தொடக்கம்

- நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
- கொடியேற்றத்தையொட்டி மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் பவனியாக எடுத்து வரப்பட்டது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னர் புனித மிக்கேல் அதிதூதர் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா கோவில் உள்ளிருந்து எடுத்து வந்தார்.
இந்த புனித கொடியை குருவானவர்கள் ஜெபநாதன், லாரன்ஸ், பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை ஜாண் ரோஸ் ஆகியோர் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. பின்னர் அசன விருந்து வழங்கப்பட்டது.
தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படு கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, மன்றாட்டு மாலை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. ஒவ்வொரு திருவிழா நாட்களையும் அன்பியங்களை சேர்ந்த இறைமக்கள் சிறப்பிக்கிறார்கள். வருகிற 28-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படு கிறது.
அன்று மாலை 7 மணிக்கு பாதிரியார் நெல்சன் பால்ராஜ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. திராளான பக்தர்கள் இப்பவனியில் பங்கேற்று உப்பு, மிளகு, பூமாலை காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்.
29-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் பாதிரியார் சகாயம் தலைமை யில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு பவுர்ணமி மரிவல வழிபாடும், அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. இரவு அசனவிருந்து வழங்கப்படு கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா தலைமையில் விழாக்கு ழுவினர் செய்துள்ளனர்.