என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்கூர் அரசு கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை கருத்தரங்கம்

- தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவை போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடந்தது.
- மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவை போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடந்தது.
இந்த கருத்தரங்கை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள் இசையுடன் திருக்குறள் நடனம் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) பவானி, தமிழ் வளர்ச்சித்துறை முன்னர்ள இயக்குநர் எழிலரசு, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயன், அரசு ஆடவர் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பழனிவேலு, அரசு ஆடவர் கல்லூரி விரிவுரையாளர் பேகம், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்குமார், முன்னர்ள சட்டமன்ற உறுபப்பினர் கோவிந்தசாமி, தமிழ் வளாச்சித்துறையின் தமிழ்செல்மல் விருதாளர் கருமைத் தமிழாழன், ராசு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.