என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஆலோசனைக் கூட்டம்
- ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- 7 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி,
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா பூர்வாங்க ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும் கூட்டுறவு வார விழா தலைவருமான ஏகாம்பரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும் போது 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கூட்டுறவு அமைப்புகளின் வளர்ச்சியும் அவற்றின் எதிர்காலமும் என்ற முதன்மை மையக் கருப்பொருளை மையமாகக் கொண்டு வருகிற 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் நாட்களும் கூட்டுறவுக் கொடியை ஏற்றி கூட்டுறவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் விழா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்