என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அப்பர்பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு அப்பர்பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/11/12/1790820-bavaniooty.jpg)
அப்பர்பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அணை நீர் மட்டம் 204 அடியாக உயர்ந்தது.
- 833.65 மொவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் 13 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது.
அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175 மெகாவாட், பரளி-180 மெகாவாட், பில்லுார்-100 மெகாவாட், அவலாஞ்சி-40 மெகாவாட், காட்டுகுப்பை-30 மெகாவாட், சிங்காரா-150 மெகாவாட், பைக்காரா- 59.2 மெகாவாட், பைக்காராமைக்ரோ- 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ-0.70 மெகாவாட், மாயார்-36 மெகாவாட், மரவகண்டி-0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மொவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீலகிரி மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 'பீக்அவர்ஸ்' எனப்படும் மின்தேவை அதிகமாக உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் உபயோகப்படுத்தப்ப டுவதுடன் தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதம் மின் உற்பத்தி நீலகிரி மின்நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக அணைக்கட்டுகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்தது. இடையில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது வட கிழக்கு பருவ மழை துவங்கியதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.
இதனால் குந்தா, கெத்தை, அவலாஞ்சி, எமரால்டு உள்பட பெரும்பாலான அணைகளிலும் நீர் மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ள அப்பர்பவானி அணையின் மொத்த கொள்ளளவு 210 அடிகளாகும்.
தற்போது அப்பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளளவான 210 அடியில் நீரின் இருப்பு 204 அடிகளாக உயர்ந்துள்ளது. இதை தொடந்து அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின் நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதல் மின்சார உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.