search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர்.
    • இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் சின்னசேலம் போலீ சாரிடம் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர். இந்நிலையில் கனியாமூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கி ளை நிறுத்திய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினர். சந்தேக மடைந்த போலீசார், 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குணசீலன் (வயது 28), மாரிமுத்து மகன் கண்ணன் (40), பொன்னுரங்கன் மகன் செந்தில் (39) என்பதும், 3 பேரும் சேர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி, சின்னசேலத் தில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரிடம் கொள்ளையடித்தது, மூங்கில் பாடியில் உள்ள செறுப்பு கடையில் பணம் திருடியது, நைனார்பாளை யத்தில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் வழிப்பறி செய்தது போன்ற சம்பவங்களில் 3 பேரும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை கைது செய்த போலீசாரை சின்னசேலம் பகுதி மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

    • அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு முருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ெரயில் நிலையம் தண்டவாளம் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றினர்.

    பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு முருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இது கொலையா? அல்லது தற்கொலையா? அல்லது ெரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? என்பது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவிலுார்-தியாகதுருகம் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக சாலையை ஆக்கி ரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், டீக் கடைகள், ஜெராக்ஸ் கடை, பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சவுரிராஜ், வாணாபுரம் தாசில்தார் குமரன், துணை தாசில்தார் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணையன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, ஊராட்சி தலைவர் வினிதாமகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் தோப்புக்காரன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். அப்போது ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் டி.எஸ்.பி ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இளங்கோவன், தலைமை போலீசார் ஏழுமலை, ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ்குப்பம் போலீஸ் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் டி.எஸ்.பி ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் அருகே உள்ள பாரில் சட்ட விரோதமாக 988 மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

    பின்னர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ரமேஷ் முன்னிலையில் 988 மது பாட்டில்களை கொட்டி அழிக்கப்பட்டது. இதில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், நயினார் பாளையம் தீயணைப்பு வீரர்கள் குமரவேல், ஹரிதாஸ், இளங்கோவன், தலைமை போலீசார் ஏழுமலை, ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இவர் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்
    • வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனமும் சேர்ந்த விக்கிக்கு உலக சாதனை விருது வழங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்த முத்து- உமாபதி தம்பதியின் மகன் விக்கி. இவர் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். விக்கி சிலம்பம் போட்டியில் 2 உலக சாதனைகளை படைத் துள்ளார். கள்ளக்குறிச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்த சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் பங்கேற்று அதிக கேடயங்கள், பதக்கங் கள், சான்றிதழ்களை வென்றுள்ளார். இந்நிலை யில் 3 மாதங்களுக்கு முன் பானை மீது நின்று 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார். இதை பாராட்டி குளோபல் நிறுவனம் விருது வழங்கியது.

    அதைத்தொடர்ந்து புதிய முயற்சியாக முட்டி போட்டு கொண்டே 2 கைகளிலும் சிலம்பும் சுற்றிக்கொண்டு 12.36 நிமிடத்தில் 1 கிலோ மீட்டரை கடந்து சாதனை படைத்தார். எக்சலண்ட் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் மற்றும் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனமும் சேர்ந்த விக்கிக்கு உலக சாதனை விருது வழங்கியது. இந்நிலையில் விருதுகள் மற்றும் சான்றிதழ்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத் தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்துக்கள் மற்றும் ஆசிபெற்றார். அப்போது ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், மாநில மருத்துவர் அணி செயலாளர் கம்பன், அண்ணாதுரை எம்.பி., எம்.எஸ்.குமார் முகிலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டு, மரங்கள் அனைத்தும் வெட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • சிலைகளை சேதப்படுத்தி, மரங்களை வெட்டிய மர்மநபரை தேடி வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராம எல்லையில் உள்ள பஞ்சமி நிலத்தில் கன்னிமார் கோவில் உள்ளது. கடந்த 14-ந்தேதி ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட கிராம மக்கள் இக்கோவிலில் கிடா வெட்டி வழிபாடு செய்ய 100-க்கும் மேற்பட்டோர் வந்தனர். கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டு, மரங்கள் அனைத்தும் வெட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது சம்பந்தமாக போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    மேலும், கோவில் சிலையை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்டோர் கோவிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பாரத் சின்னசேலம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சாமி சிலைகளை சேதப்படுத்தி, மரங்களை வெட்டிய மர்மநபரை தேடி வந்தனர். இ்ந்நிலையில் சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அங்குள்ள மரங்களை வெட்டியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சங்கராபுரம் அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துெ கொண்டார்.
    • அஜித்குமார் பால் ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்கிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ராஜ பாண்டலம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 21) என்பவருக்கும், மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுபலட்சுமி (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு துரைமுருகன் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. அஜித்குமார் பால் ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுபலட்சுமி திடீரென தூக்க போட்டுக் கொண்டார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுபலட்சுமி இறந்தார்.

    இது குறித்து சுபலட்சுமி தாய் சித்ரா, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சித்ராவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா என கள்ளக் குறிச்சி கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.

    • ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    • பொதுக்குழு உறுப்பினர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழ்பாடியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., கழக செயலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் பெரு மாள், துரைமுருகன், பாரதி தாசன், அசோக் குமார், ரிஷிவந்தியம் ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், ஒன்றிய துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணா துரை, கே.அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், அமிர்தம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவுறு த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள பொது நாட்குறிப்புகள், வழக்கு சுற்று பதிவேடு, 7 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளி ட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவுறு த்தினார். முன்னதாக தமிழ்நா டு காவல்துறை சார்பில் தியாகதுருகம் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள பல் பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, நிலைய எழுத்தர் சீனிவாசன், தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மனநலம் குன்றிய மகனை வைத்துக் கொண்டு, விவசாயம் பார்க்க முடியாமல் முத்து அவதியுற்று வந்துள்ளார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அடுத்த அங்கனூரை சேர்ந்தவர் முத்து (வயது 65). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் அதே ஊரில் விவசாயம் செய்து வந்தார். இவரது பணி சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போனார். இதையடுத்து மனநலம் குன்றிய மகனை வைத்துக் கொண்டு, விவசாயம் பார்க்க முடியாமல் முத்து அவதியுற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்து அவர், விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எறையூர் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
    • தர்ஷினி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36), அவரது மகள் தர்ஷினி (4). சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எறையூர் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காட்டு செல்லூர் தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த கார் ஆறுமுகம் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த தர்ஷினி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்து ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆறுமுகம் மனைவி உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இதற்காக அதே ஊரைச் சேர்ந்தவ ஒரு சிலரை ஏஜெண்டுகளாக நியமனம் செய்தார்.
    • அவரிடம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் பரமநத்தம் ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் என்பவரது மகன் ஷமீர் அகமது (வயது 26). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மூரார்பா ளையத்தில் அலுவலகம் அமைத்து, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி வழங்குவதாக அறிவித்தார். இதற்காக அதே ஊரைச் சேர்ந்தவ ஒரு சிலரை ஏஜெண்டுகளாக நியமனம் செய்தார்.இதனை நம்பி ஏராளமானோர் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்தனர். ஆரம்ப காலத்தில் வட்டி வழங்கி ஷமீர் அகமது, கடந்த சில மாதங்களாக வட்டி வழங்கவில்லை. மேலும், மூரார்பாளையத்தில் இருந்து அலுவலகம், தொழில் நிறுவனங்களை மூடிவிட்டு தலைமறை வாகினார்.

    அவரிடம் பணிபுரிந்த ஏஜெண்டுகள், ஷமீர் அகமது சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து அவரை மூரார்பாளை யத்திற்கு அழைத்து வந்து, சங்கராபுரம் போலீசாரிடம் ஓப்படை த்தனர். போலீ சாரின் விசாரணையில் மோசடி மன்னன் ஷமிர் அகமது கூறியதாவது:-எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்து கிருஷ்ணாபுரம் ஆகும். எனது சகோதரியை கள்ளக்கு றிச்சியில் திருமணம் செய்து கொடு த்துள்ளதால், அப்பகுதியில் எனக்கு பழக்கம் ஏற்பட்ட து. நான் கடந்த 15 வரு டமாக மூரார்பாளை யத்தில் வசித்து வருகிறேன். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு திருமணமாகி ரூபா என்கிற அப்ரீன் என்ற மனைவியும், 1 ½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடை உரிமையாளர், அவரிடம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி கொடுத்தார்.

    அதேபோல் நானும் எனது பெயரில் மூரார்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் தொடங்கி ஏஜெண்டுகள் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து பணத்தை பெற்று முதலீடு செய்தேன். நான் முதலீடு செய்த இடத்தில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தலைமறைவாகி சென்னையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தேன். பணத்தை முதலீடு செய்த பொதுமக்களின் தொந்தரவு தாங்க முடியாததால், அந்த வீ்ட்டை காலி செய்து விட்டு உறவினர் வீட்டில் வசித்து வந்தேன். இருந்தபோதும் என்னிடம் பணி புரிந்த ஏஜெண்டுகள் என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு ஷமீர் அகமது தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து மோசடி மன்னன் ஷமீர் அகமதுவை, சங்கராபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஷமீர் அகமது பொதுமக்களிடம் எவ்வளவு பணம் வசூல் செய்தார்? எத்தனை பேருக்கு பணத்தை திருப்பி கொடுத்துள்ளார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை?. எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சங்கராபுரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ×