search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார்.
    • கணபதி பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா உ.நெமிலி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 28)கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வழக்கம் போல் நெமிலி அருகே பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடுத்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில் அழைத்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அளித்து அதில் முறையான தீர்வு காணமுடியாத 74 மனுக்கள் மீது விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதில் 63 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 11 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், லஷ்மண குமார், மனோஜ்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மனுதாரர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • சங்கராபுரம் அருகே லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதன் காரணமாக சாலையில் அதிகளவு புழுதி பறப்பதால், கடும் சிரமமடைந்து வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இருந்து பழையூருக்கு செல்லும் சாலையில் தினசரி ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக சாலையில் அதிகளவு புழுதி பறப்பதால், கடும் சிரமமடைந்து வந்தனர். இந்த நிலையில் அவ்வழியாக வந்த லாரி டிரைவரிடம், அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் லாரியை இவ்வழியாக இயக்காமல் மாற்று வழியில் இயக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து டிரைவர் லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தி, என்னை இந்த வழியில் செல்லக்கூடாது என்று கூறினால், நீங்கள் யாரும் இவ்வழியாக செல்லக்கூடாது என்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் லாரியை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி கூலி தொழிலாளி பலியானார்.
    • ராஜேஸ்வரியை பார்த்துவிட்டு பூட்டை கிராமத்திற்கு குமார் மற்றும் சிவசங்கர் புறப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது55) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று உறவினர் ஏழுமலை மகன் சிவசங்கர்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாதவச்சேரியில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரியை பார்க்கச் சென்றார். பின் ராஜேஸ்வரியை பார்த்துவிட்டு பூட்டை கிராமத்திற்கு குமார் மற்றும் சிவசங்கர் புறப்பட்டனர். சிவசங்கர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அப்போது கொசப்பாடி ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது செல்லம்பட்டில் இருந்து பாலப்பட்டு நோக்கி சென்ற டிராக்டர் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சிவசங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவில்தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • முன்னுரிமை அளித்து வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு தலை வரும்,மாவட்ட ஊரா ட்சிக்குழு தலைவருமான புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வ ராணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தங்கம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட திட்ட குழு தலைவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவில்தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நமது மாநிலத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைதலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு துணை த்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதிக இடஒது க்கீடுகளை வழங்கியுள்ளார். மேலும் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வரும் முதல்-அமைச்ச ருக்குமாவட்ட திட்ட குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மாவட்ட கலெக்டரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்கு சான்றாக சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனியா ர்வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான வேலைநாடுநர்கள் வேலை பெற்றுள்ளனர். மேலும்,கிராமங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில், கிராமப்புறங்களில் என்ன வளர்ச்சி பணிக ள்தேவைகள் என்பதை மாவட்ட திட்டக்குழு மூலம் கண்டறிந்து பொதுமக்களின் தேவை களின் அடிப்ப டையில் முன்னுரிமை அளித்து வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட கலெக்டர்ஷ்ரவன் குமார் பேசியதாவது:-

    அரசு தொடக்கப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டம் தரமாக வழங்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரேனும் விடுபட்டுள்ளனரா, பருவ மழைக்கு முன்பு கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதா, குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா மற்றும் கிராமத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் நிலை மற்றும் தேவைகள் குறித்தும் திட்டக்குழு உறுப்பினர்கள் பார்வையிட வேண்டும். இதே போல் ஒவ்வொரு ஊராட்சியிலும் சாலை, கழிவு நீர், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் அப்பகுதி மக்களின் உடனடி தேவை குறித்து கேட்டறிந்து மாவட்ட திட்ட குழு ஒப்புதலுடன், மாநில திட்ட குழுவிற்கு தேவைப்படும் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்தும், அதற்கு ண்டான நிதிவசதிகள் குறித்தும் திட்ட அறிக்கை சமர்ப்பித்து, தொடர் நட வடிக்கைகள் மேற்கொள்ளலாம் .  இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு செயலாளர்முரளிதரன், துணை இயக்குநர் (வேளாண்மை திட்டம்) சுந்தரம், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சவிதா, திட்ட குழு உறுப்பினர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர்.
    • இடைஞ்சலாகவும் இருப்பதாக கூறி ஆட்டோக்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் அருகே ஆட்டோவை நிறுத்தி வந்தார்கள். இதனால் போக்குவரத்து இடையூறாகவும், பொது மக்களுக்கு இடைஞ்சலாகவும் இருப்பதாக கூறி ஆட்டோக்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இதனால் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் தற்காலிகமாக ஆட்டோவை நிறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பேரூராட்சி முன்பு திடீரென 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கூட்டத்தை கலைத்தனர். இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர் பேட்டை நகர அ.தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த 20-ந் தேதி நடைபெற இருந்தது
    • தி.மு.க.வினர்அ.தி.மு.க டிஜிட்டல் பேனர்களை கிழித்து கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 57). உளுந்தூர்பேட்டை நகர அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார். இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லாலிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர் பேட்டை நகர அ.தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த 20-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்காக காவல்துறை அனுமதி பெற்று நடைபெற இருந்தது. இந்த பொதுக் கூட்டத்திற்காக காவல்துறை அனுமதி பெற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 20-ந் தேதிகாலை 10மணியளவில் பஸ் நிலையம் அருகே எனது இருக்கசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது தி.மு.க.வினர்அ.தி.மு.க டிஜிட்டல் பேனர்களை கிழித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த என்னை அவர்கள் ஒன்றுக்கூடிக்கொண்டு எனது இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி என்னை கையாலும், காலாலும் சரமாரியாக தாக்கி வேட்டியை உருவி கிழித்து எறிந்து அரை நிர்வாணப்படுத்தி என்னை பொதுமக்கள் மத்தியில் மானபங்கம் செய்தனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.அங்கு வந்த காவல்துறையினர் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் உதவியுடன் அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளேன். அந்த நபர்கள் மீது உரிய விசாரணைநடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    • இவர்களுக்கு தீபாவளிக்கு தேவையான பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படுமென கூறியிருந்தனர்.
    • கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இ

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 51). இவரது மகன் அந்தோணி செல்வராஜ் (32). இருவரும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்களிடம் தீபாவளி சீட்டு கட்டினர். இவர்களுக்கு தீபா வளிக்கு தேவையான பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படுமென கூறியிருந்தனர். இதனை நம்பி அதே ஊரைச் சேர்ந்த பீட்டர் பவுல் (61), அவரது அண்ணன் ஆரோன் (65) ஆகியோர் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இதற்கான பொருட்களையோ, பணத்தையோ மரியதாஸ், அந்தோணி செல்வராஜ் தரவில்லை.

    இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பீட்டர் பவுல், ஆரோன் ஆகியோர் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, தீபாவளி சீட்டு பிடித்தவர்கள் ரூ.5 லட்சத்து 19 ஆயிரத்து 500 ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து மரியதாஸ், அந்தோணி செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய எலவனா சூர்கோட்டை போலீ சாருக்கு பரிந்துரைக்கப் பட்டது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அந்தோணி செல்வராஜை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள மரிய தாசை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டார்.
    • மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆசிர்வாதம் (வயது 44) என்பவர் தனது வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அவரிடமிருந்து 7 மதுபாட்டில் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல் பெரியமாமாட்டு பஸ் நிறுத்தம் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அங்கிருந்த 17 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (35) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மான்வேட்டை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே யுள்ள எலவனாசூர் கோட்டை பகுதியில் உள்ள காடுகளில் மான்வேட்டை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி எலவ னாசூர்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் எறையூர் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் 2 நபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றனர்.

    அவர்களை அழைத்தபோது, 2 பேரும் தப்பியோடினர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எறையூரை சேர்ந்த ராஜ் என்கிற அருள்ஜோதி (வயது 31), அம்புரோஸ் மகன் குறவன் என்கிற டேவில் செல்வராஜ் (40) என்பது தெரியவந்தது. இவர்கள் நாட்டுத் துப்பாக்கி மூலம் மான்களை வேட்டையாட முயற்சித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • முகாமில் கலந்து கொண்ட அனை வரும் உங்கள் வாழ்வில் ஒருஇலக்கினை வைத்துக் கொள்ள வேண்டும்.
    • பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் வளாகத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம்இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குநர் லதா அனைவரையும் வரவேற்றார். முகாமில் பொதுப்பணிகள் நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-வேலைவாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவினை புதுப்பிக்க வேண்டும்.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தற்போது இத்துறைக்குதிறன் மேம்பாட்டுத்துறை வேலை வாய்ப்பு அலுவலகம் என பெயர் சூட்டியுள்ளார்கள். படித்த அனைத்து இளைஞர் களுக்கும் அரசு வேலை வழங்க இயலாது என்பதனால், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் என் பதற்காகத்தான் இத்த கைய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப் படுகின்றன.இந்த முகாமில் கலந்து கொண்ட அனை வரும் உங்கள் வாழ்வில் ஒருஇலக்கினை வைத்துக் கொள்ள வேண்டும். இலக்கினை அமைத்துக் கொண்டு வாழ்ந்தால் தான் உழைக்கும் எண்ணம் வரும். எனவே, இம்முகாமில் பணி நியமன ஆணை பெறும் அனைவரும் தங்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் இருந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும்  இவ்வாறு அவர் பேசினார்.தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல-அைமச்சர் தமிழ்நாட்டில் உள்ள படித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக் கிட வேண்டும் என்ற நோக் கத்தில், செயல்படுத்திய திட்டம் தான் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் இன்று நடைபெறும் 41-வது தனியார் வேலைவாய்ப்பு முகாம். இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 150 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளது. இளைஞர்கள் தாங்கள் விரும்பிய எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சரியான வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். தனியார் துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. இளைஞர்கள் தன்நம்பிக்கையுடனும்,விடாமுயற்சியுடனும் செயல்பட வேண்டும். போராட்டங்கள் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றிகள் இல்லை, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுங்கள். முடியாது என்பது உலகில் இல்லை, வெற்றி என்பதும் வெகு தொலைவில் இல்லை. எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம், அலட்சியமான மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகசரித்திரம் இல்லை எனவே இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பை பெற்று வாழ்வில்வெற்றி பெற வேண்டும் . இவ்வாறு அவர் பேசி னார்.

    தொடர்ந்து அமைச் சர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட இளைஞர் களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். இந்த முகாமில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 152 முன்னனி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. மாவட்டம் முழுவதும் இருந்து 16 மாற்றுத்திறனாளிகள், 4,520 பெண்கள் உட்பட 10,132 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில் 338 பெண்கள்மற்றும் 9 மாற்றுத்திறனாளிகள் உட்பட 1021 வேலைநாடு நர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 64 நபர்கள் திறன் பயிற்சிக்கு பதிவு செய்தனர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பொருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், துணை இயக்குநர் மணி, உதவி இயக்குநர் பாலமுருகன், ஏ.கே.டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் மகேந்திரன், அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.

    • அந்த விவசாய நிலத்தில் கொட்டாய் போட்டு ஆடுகள் வளர்த்து வருகிறார்கள்.
    • மறுநாள் காலை வந்து பார்த்த போது 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது .

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஏ வாசுதேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த அழகரசன் என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். அந்த விவசாய நிலத்தில் கொட்டாய் போட்டு ஆடுகள் வளர்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடுகளை மேச்சலுக்கு விட்டு முடித்துக் கொண்டு வழக்கம்போல் இரவு விவசாய நிலத்தில் உள்ள கொட்டாயில் கட்டி விட்டு அருகில் உள்ள இவரது வீட்டிற்கு தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது . இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் அனைத்து இடங்களிலும் தேடியும் எங்கேயும் கிடைக்கவில்லை. திருட்டு போன ஆடுகளின் மதிப்பு 40 ஆயிரம் என தெரிய வருகிறது. 

    ×