search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓடை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக் கோரி கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது விருகாவூர் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் ஞானப்பிரகாஷ் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் எஸ்.ஒகையூர் கிராமத்தில் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது சில நிலங்களில் பயிறு இருந்ததால் அந்த பகுதி ஆக்கிரமிப்பு அகற்றவில்லை.

    இதனால் தங்கள் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல் அனைத்து நிலத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறி எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், ராஜா, கொடியரசு, பிச்சப்பிள்ளை, பொன்னுசாமி உள்ளிட்ட 14 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் மற்றும் சிலர் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. புகாரின் எஸ்.ஒகையூரை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 17 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை யினை பார்வையிட்டார்.

    கள்ளக்குறிச்சி, செப்.16-

    கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனையில், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அவர் கூறிய தாவது:- தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தனி வார்டுகளை அமைத்தி ட டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்ட ரிடம் கேட்டறிந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்று வரும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை யினை பார்வையிட்டார். பின்னர், மாணவ ர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை மாண வர்களுக்கு வழங்கினர். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, இணை பேராசிரியர் பொற்செல்வி, சமீம் பேராசிரியர் தீபா மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

    • அமுதா டிராக்டரில் இருந்து சாவியை எடுத்துகொண்டு தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தார்.
    • அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அமுதா (வயது 42) இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (56) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அமுதாவின் நிலத்தில் இருந்த பருத்திச் செடியை, அருணாச்சலம் டிராக்டர் மூலம் உழவு ஓட்டி அழித்ததாக கூறப்படுகிறது. அப்போது அமுதா டிராக்டரில் இருந்து சாவியை எடுத்துகொண்டு தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் ஏன் பயிரை அழித்து டிராக்டரை ஓட்டுகிறீர்கள் என அருணாச்சலத்திடம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அருணாச்சலம் டிராக்டரில் இருந்த கட்டையை எடுத்து அமுதாவின் உறவினர் பாலகிருஷ்ண னை தாக்க முயன்றுள்ளார்.

    அப்போது அமுதா தடுக்க முயன்ற போது அவரது தலையில் அடிபட்டு காயம் அடைந்தார். தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அமுதா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.

    • பஸ் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர் அருகே நேற்று நள்ளிரவு நேரத்தில் சென்றது.
    • காயமடைந்த மூர்த்தியை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையிலிருந்து, ராமநாதபுரத்திற்கு சொகுசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை ராமநாதபுரத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாதூர் அருகே நேற்று நள்ளிரவு நேரத்தில் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்து, டிரைவர் மூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பஸ்சில் முன்பக்கம் அமர்ந்திருந்த ஒரு சில பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.

    விபத்து நடந்த சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 108 ஆம்புலன்சை வரவழைத்து காயமடைந்த மூர்த்தியை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பஸ்சில் வந்த பயணிகளை, மாற்று பஸ்சில் ஏற்றி ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே உள்ள மட்டிகை கிராமத்தில் செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்ட மர்நபர்கள் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., லாரி போன்றவைகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், லாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • 1 டன் மலர்களால் சாமிக்கு அலங்காரம்
    • கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத அமாவாசையான நேற்று மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து 1 டன் மலர்களால் உற்சவர் பெரியநாயகி அம்மனுடன் விநாயகர் இருப்பது போன்று அலங்கரிக்கப்பட்டு அம்மன் கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அமரவைக்க ப்பட்டது. அம்மனுக்கு தாலாட்டுப்பாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • இவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுள்ளார்.
    • ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஏ. வாசுதேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாகண்ணு. இவரது மகன் ரவிச்சந்திரன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக வாசுதேவனூர் கிராமத்தில் இருந்து வீ.கூட்ரோடு சென்று மீண்டும் அவரது வீட்டிற்கு செல்ல இவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது பெட்ரோல் டேங்க்கை மூட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியரான அதே கிராமத்தை சேர்ந்த கந்தன் என்பவரது மகன் நல்லதம்பி (வயது 22) என்பவர் இருசக்கர வாகனத்தை முன்னால் தள்ளுமாறு சொல்லி ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாட்ஸ் அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும்.
    • பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 114 கிராம ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவைகள் மற்றும் அடிப்படை கோரிக்கை நேரில் சந்தித்து மனுக்களாகவும், தகவல்களாகவும் தெரிவிக்க நேரம் மற்றும் பொருட்செலவை குறைக்கும் வகையில் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய கோரிக்கையான மின்சாரம், குடிநீர், தெரு மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை 6381666396 தொலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்பினால் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விஜய குமார் ஆகியோரைஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி னார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உதயமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் பிரவீன் குமார் (வயது 20) இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏழுமலை என்பவர் ஏன் என்னை திட்டினாய் என பிரவீன் குமாரிடம் கேட்டுள் ளார். தொடர்ந்து ஏழுமலை தனது நண்பர்களான வடிவேல், வீராசாமி மற்றும் மணிராஜ் ஆகியோருடன் சேர்ந்து பிரவீன் குமார், அவரது தாய் அய்யம் மாள், அண்ணன் விஜய குமார் ஆகியோரைஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லேசான காயமடைந்த பிரவீன் குமார், அய்யம்மாள், விஜயகுமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி னார். இது குறித்து பிரவீன் குமார் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ஏழுமலை, வடிவேல், வீரமணி, மணிராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகின்றனர்.

    • கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார்.
    • கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கால சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துண்டி (வயது 53) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குரால் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் நிலத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தவரை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து தூக்கிப் பார்த்த போது துண்டி இறந்து விட்டார் என தெரியவந்தது. இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சங்கரி வெங்கடேசன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
    • நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சவுந்தர்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் மோகன சங்கரி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மேல் பட்டப்ப டிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் வெங்கடேசன் (22) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடை வில் வெங்கடேசனின் நடவடி க்கை பிடிக்காததால் அவரிடமி ருந்து மோகனசங்கரி விலகி னார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அறிந்த வெங்கடேசன் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து நெட்டில் விட்டு விடுவேன் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மோகனசங்கரி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் அருகில் உள்ள நத்தம் பள்ளி கிராமத்தில் வனப்ப குதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்காக சாராய ஊரல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கெடார் பட்டிவளவு வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக் கூடிய 3 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். அதனை பதுக்கி வைத்த வர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×