search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது.
    • சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லை க்குட்பட்ட கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலை யில் நல்லாத்தூர் பெட்ரோல் பங்க் - தனியார் பள்ளிக்கு இடையே இடையே இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. இங்குள்ள புளிய மரத்தின் பின்புறம் மறைந்து நிற்கும் மர்ம நபர்கள் சாலைக்கு வந்து கையை காட்டி வாகனத்தை நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகளை திசை திருப்பி, அவர்களை தாக்கி பணம், பொருள் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் வழிப்பறி நடந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி-கச்சிரா யபாளையம் சாலையில் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணிக்குள் மர்ம நபர்களின் கைவரிசை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. எனவே, இந்த சாலையில் ரோந்து பணிக்காக கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் வழிப்பறி சம்பவங்களை தடுத்து, பொதுமக்களின் அச்சத்தையும், பீதியையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 123 பேர் கைது
    • சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம்

    கள்ளக்குறிச்சி:

    சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. வினர் அறிவித்து இருந்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிடுவதற்காக திரண்டு வந்தனர்.

    இதற்கு மாவட்டத் தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேஷ், தியாகராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாவட்ட துணைத் தலைவர் சர்தார் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது 123 பேர் கைதானார்கள். இவர்கள் அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்பு மாலையில் அனைவரையும் விடுவிக்கப்பட்டனர்.

    • வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் சென்னை- கும்பகோணம் சிதம்பரம் பிரதான சாலை பின்னலூர் கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று திரண்டு வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்து சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது சிவன் கோவில் அருகில் மற்றும் பஸ்நிறுத்தம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது.

    தற்போது சாலை அமைக்கப்பட்ட பின்பு அந்த இடத்தில் வேகத் தடை அமைக்கப்படவில்லை . இதனால் தொடர்ந்து விபத்து நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் டி.எஸ்.பி. பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் சங்கராபுரம், பாண்டலம், குளத்தூர், வட சிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆருர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளி குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின்வாரிய செயற் பொறி யாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்து மோட் டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு தப்பி யோட முயற்சித்தார்.
    • மணி கண்டன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை பறி முதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பொற்படாகுறிச்சி கிராம த்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 68) விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு கட்டிபோட்டு விட்டு, நிலத்திற்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர், கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்து மோட் டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு தப்பி யோட முயற்சித்தார். ஆடு கூச்சலிட்ட சத்தம் கேட்டு ஓடிவந்த நடராஜன், மர்ம நபரை மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்தார். பின்னர், மர்மநபரை சின்னசேலம் போலீசாரிடம் ஓப்படைத்தார். விசாரணை யில் முடியனுர் மேற்கு தெருவை சேர்ந்த மணி கண்டன் (வயது 33) என்பது தெரியவந்தது. மணி கண்டன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை பறி முதல் செய்தனர்.

    • சில வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் .
    • வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45) விவசாய தொழில் செய்து வருகிறார் இவர் சில வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அன்று காலை 11 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சீனிவாசனின் மகன் மணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது சீனிவாசன் வாயில் நுரை தள்ளியவாறு கடந்துள்ளார் . உடனே அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒரு வாரத்தில் 32 அடியாக உயர்ந்துள்ளது.
    • குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெப்பம் சலனம் காரணமாக பரவ லாக மழை பெய்து வருகிறது. அதேபோல் கடந்த 2,3 நாட்களாக கல்வராயன் மலையில் மாலை நேரங்க ளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கல்வராயன் மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரண மாக கல்படை ஆற்றின் வழியாக நேற்று முன்தினம் நிலவரப்படி 200 கன அடி நீரும் பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 150கன அடி வரை தண்ணீர் கல்படையாற்றின் வழியாக கோமுகி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டும் ஏற்கனவே 25 அடியாக இருந்த நிலையில் தற்போது ஒரு வாரத்தில் 32 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணை நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கோமுகி அணை நீர்மட்டம் உயர்ந்து வரு வதால் கச்சிராயப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • டீக்குடிக்க சென்ற போது பரிதாபம்
    • செந்தில்குமாரை தாக்கி கத்தியால் குத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலத்தில் இன்று அதிகாலையில் டீக்குடிக்க சென்ற கட்டிடத் தொழிலாளியை மர்மநபர்கள் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோவில் வீதியில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது 45). திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கட்டிடப் பணியாளரான இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அதே வீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது, மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி, செந்தில்குமாரை தாக்கி கத்தியால் குத்தினர். இதில் மார்பு, இடுப்பு, வயிறு பகுதியில் காயமடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்ய திட்டமிட்டனரா, அல்லது தொழில் போட்டியால் கொலை முயற்சி நடைபெற்றதா அல்லது குடும்பத் தகராறா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் உள்ளிட்ட போலீசார் தகடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவரிடமிருந்து 10 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் உள்ளிட்ட போலீசார் தகடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் மணி கண்டன் (வயது 38) என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 10 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறுகையில், கள்ள க்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அ ரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது கடத்தினாலோ அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வினித்குமார் நாமக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • சங்கராபுரம் காவல் சிறப்பு உதவியாளர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் மகன் வினித்குமார் (வயது19). இவர் நாமக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் இரவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றார். அப்போது, நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். உடன் அவரை, சங்கராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனசேகரன் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் சிறப்பு உதவியாளர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நாகல்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுக்கா பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நாகல்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஓடையில் மதுபாட்டில் விற்று கொண்டிருந்த நாகல்குடி காலனியை சேர்ந்த பீமன் (வயது56) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • தினமும் நிலத்திற்கு செல்லும் சிவக்குமாரை பார்த்து டிப்டாப் ஆசாமி புன்னகைத்தார்.
    • இதனை நம்பிய சிவக்குமார், தனக்கு வனத்துறையில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவக்குமார் (வயது 42). ஆரம்ப கல்வி மட்டுமே பயின்றவர். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய நிலத்திற்கு செல்லும் வழியில் வனத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு டிப்டாப் ஆசாமி தினமும் நின்று கொண்டு அங்குள்ள வனத்துறை ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருப்பார். இதனை பார்த்துக் கொண்டு தினமும் நிலத்திற்கு செல்லும் சிவக்குமாரை பார்த்து டிப்டாப் ஆசாமி புன்னகை த்தார். பதிலுக்கு புன்ன கைத்த சிவக்குமாரிடம் டிப்டாப் ஆசாமி நாள டைவில் நண்பராகி விட்டார்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தண்டராம்பட்டை சேர்ந்த குணசேகரன் மகன் சக்தி (38) என்பது சிவக்குமாருக்கு தெரியவந்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து விவசாயம் குறித்து பேசிவந்தனர். விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, வனத்துறைக்கு வேலைக்கு செல்கிறாயா என்று சிவக்குமாரிடம் டிப்டாப் ஆசாமி சக்தி கேட்டுள்ளார். தனக்கு வனத்துறை உயர் அதிகாரிகள் மிகவும் நெருக்கம், அதனால் தான் இங்குள்ளவர்கள் எனக்கு மறியாதை அளிக்கின்றனர் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய சிவக்குமார், தனக்கு வனத்துறையில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

    ரூ.5 லட்சம் கொடு, அதனை வனத்துறை அதிகாரிடம் கொடுத்து உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று டிப்டாப் ஆசாமி சக்தி, சிவக்கு மாரிடம் கேட்டுள்ளார். இதனை நம்பிய சிவக்குமார், பல்வேறு இடங்களில் கடன் வாங்கி ரூ.5 லட்சத்தை சக்தியிடம் கடந்த மே மாதம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி சென்றது முதல் சிவக்கு மாரை பார்க்க சக்தி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிவக்குமார், சக்தியை தேடி கண்டுபிடித்தார். உனக்கு வேலை வாங்கவே அலைந்து கொண்டி ருக்கிறேன், செப்டம்பரில் உனக்கு வேலை கிடைக்கும் என்று கூறிய சக்தி, சிவக்குமாரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சக்தியை தேடி சிவக்குமார் சென்றார். அவர் அளித்த பதில் சிவக்குமாருக்கு திருப்தி அளிக்காததால், எனக்கு வனத்துறை வேலை வேண்டாம், பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சக்தி, சிவக்குமாரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார், இது குறித்து சங்கராபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெ க்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    ×