search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதிகளான குரால் வீர பயங்கரம் கூகையூர் பாக்கம் பாடி, காளசமுத்திரம், நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஜி3 ஆலைய மூவிஸ் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு ஐயப்பன் துணை இருப்பான் என வைக்கப்பட்டுள்ளது.படத்தை தனலட்சுமி கணேசன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, பாடல், இயக்கம் மகாகணேஷ், இணை தயாரிப்பு சரஸ்வதி செல்வராஜ், அசோசியட் விஜயராஜ், உதவி இயக்குனர் திருமலை மாயக்கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை ராஜமுத்து, தயாரிப்பு நிர்வாகம் சந்திரசேகரன், இசை சதாசிவம் ஜெயராமன், ஒளிப்பதிவு துருகம் சதா, எடிட்டிங் ஆனந்த் செய்து வருகிறார். படப்பிடிப்பு சின்னசேலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சினிமா படபிடிப்பை அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

    • குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரப்பர் மற்றும் வாழை அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது.
    • வெளியூர்களுக்கும், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரப்பர் மற்றும் வாழை அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் குறிப்பாக மட்டி, செவ்வாழை, ரசக்கதலி, ரோபஸ்டா உள்பட பல்வேறுவிதமான வாழைப்பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் வாழைத் தார்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி வெளியூர்களுக்கும், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் பருவமழையை நம்பியும் பாசன குளங்களை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை குமரி மாவட்டத்தில் பொய்த்து போய்விட்டது. இதனால் பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட வாழைகளுக்கு தண்ணீர் இல்லாமல் கருகிப்போய் உள்ளது. சில விவசாயிகள் மோட்டார் மூலமாக தண்ணீரை வைத்து வாழை பயிரிட்டுள்ளனர். ஆனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதனுடைய உற்பத்தி குறைவாகவே உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூடிய வழைத்தார்களின் வரத்து குறைந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் வரத்து குறைந்துள்ளதால் வாழைத்தார்கள் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக நாகர்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ மட்டி பழம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. மட்டி வாழைத்தார் ரூ.1000-க்கு மேல் விற்பனை ஆகிய வருகிறது. இதேபோல் ரசக்கதலி வாழைப்பழத்தின் விலையும் 4 மடங்கு உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.95 ஆக உயர்ந்துள்ளது. ரசக்கதலி வாழைத்தார் ஏற்கனவே ரூ. ௨௫௦ முதல் ரூ.300 வரை விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது ரூ.800 முதல் ரூ.௮௫௦ வரை விற்பனையாகி வருகிறது. பாளையங்கோட்டை பழமும் கிலோ ரூ.15-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. செவ்வாழை பழத்தை பொறுத்த மட்டில் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ செவ்வாழை ரூ.65-க்கு விற்பனை யானது. ஒரு வாழைத்தார் ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டது. ஏத்தன் பழத்தின் விலையும் அதிகமாகியுள்ளது. ரூ.40-க்கு விற்கப்பட்ட ஏத்தன்பழம் தற்போது ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. ரோபஸ்டா, நாட்டுபழம், சக்கை பேயன் விலை உயர்ந்துள்ளது. வாழைத்தார்கள் விலை 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது.இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-குமரி மாவட்டத்தில் ஏற்கனவே வாழைத்தார்கள் அதிகளவு விற்பனைக்காக வரும்.ஆனால் தற்போது பருவமழை பொய்த்து விட்டதால் வழைத்தார்கள் வரத்துகுறைவாகி உள்ளது. மேலும் ஆவணி மாதம் திருமண சீசன் அதிகம் இருக்கும்.இதனால் மக்களுக்கு பழத்தின் தேவை அதிகமாக தேவைப்படும். வரத்து குறைவாகஉள்ள காரணத்தினால் விலை உயர்ந்துள்ளது. இது மட்டும் இன்றி ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் இருந்து வியாபாரிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துபழங்களை வாங்கி செல்வார் கள். தற்போது ஓணம் பண்டிகை 29-ந்தேதிகொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வியா பாரிகள் கேரளாவில் இருந்துபழங்களை வாங்குவதற்கு வருகி றார்கள். ஆனால் போதிய அளவு வாழைத்தார்கள்இல்லாததால் விலை அதிகரித்து உள்ளது என்றார்.

    • தொரடி ப்பட்டு ஊராட்சியில் ஆத்து வளவு என்கிற ஆத்துக்காடு கிராமம் உள்ளது.
    • மின்சாரம் இல்லாத ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஒன்றி யத்திற்கு உட்பட்ட தொரடி ப்பட்டு ஊராட்சியில் ஆத்து வளவு என்கிற ஆத்துக்காடு கிராமம் உள்ளது. தொரடிப்பட்டு கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஒத்தையடிப் பாதை வழியாகச் சென்றால் ஆத்துக்காடு என்கிற ஆத்து வளவு கிராமத்திற்கு செல்லலாம். அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வந்தாலும் ,இதுவரை மின்சாரம் இல்லாமல் மின் துறையினரின் கண்ணில் படாத ஒரு கிராமமாக இந்த ஆத்துக்காடு கிராமம் உள்ளது. செல்போனுக்கு சார்ஜ் வேண்டுமென்றாலும் அருகில் உள்ள கிராம த்திற்குச் சென்று தான் செல்போன் சார்ஜ் செய்து வருகிறார்கள். உலகமே டிஜிட்டல் மயமாக இருந்து வரும் இந்த கால கட்டத்தில் கல்வரா யன்மலை ஆத்துக்காடு கிராமத்தில் மின்சாரம் இல்லாத ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது என்பது வேடிக்கை யாகத்தான் உள்ளது. ஆகையால் இப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளின் கண்ணில் படாத ஒரு தனி தீவு போல் வசித்து வருகிறார்கள். ஆகையால் இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ராமச்சந்திரன் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார்.
    • சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32) டிரைவர். இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள கார், வேன் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் ராஜா (27), பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (27), மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்வராயன் மகன் ருத்திரன் (25) உள்ளிட்ட மற்றும் சிலர் அங்கு வந்து ஏற்கனவே மதியம் எங்களிடம் ஏன் பிரச்சனை செய்தாய் எனக் கூறி ராமச்சந்திரனை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

    இதே போல் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரில் நானும் எனது நண்பர் ராஜாவும் தனியார் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வருவதாகவும், வேலை முடித்துவிட்டு தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் உள்ள காலி மனையில் உணவு அருந்திய போது அங்கே வந்த வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (47), அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (43) மற்றும் மடம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (40) உள்ளிட்ட சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து இரு தரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ராஜா, தமிழ்ச்செல்வன், ருத்திரன் மற்றும் சுதாகர், சக்திவேல், ரஞ்சித் குமார் ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • முருகன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
    • தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்னதாகவே வீடு முழுவதும் எரிந்து நாசமாயின.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள அக்கறைபாளையம் காந்தி நகரை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் (வயது 40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சின்னசாமி படுத்து உறங்கினார். நள்ளிரவு நேரத்தில் சின்னசாமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்கம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதனைப் பார்த்து கூச்சலிட்டு வீட்டில் இருந்த அனைவரையும் சின்னமணி வெளியேற்றினார். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்னதாகவே வீடு முழுவதும் எரிந்து நாசமாயின. இதில் வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 22 ஆயிரம், 25 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன், பீரோ, கட்டில், டிவி உள்பட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாயின. சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் எரிந்து போன வீட்டை பார்வையிட்டார். தீவிபத்து குறித்து கச்சராயபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் குழந்தை உள்ளது.
    • அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் எங்கு தேடியும்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் திருமலை (வயது 29) இவரது மனைவி தனம் (20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனம் தனது குழந்தையுடன் சம்பவத்தன்று அதே பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைக்கு சென்றார். பின்னர் தனம் வேைல முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ந்த கணவர் திருமலை மனைவி தனத்தை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருமலை கொடுத்த புகாரின் பேரில் தயாதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேசிய அடையாள அட்டை முகாம் 24- ந் தேதி நடைபெறுகிறது.
    • 7- ந்தேதி அன்று வழக்கம்போல் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் 24- ந் தேதி திருக்கோவிலூர் வட்டார வள மையத்திலும், 25- ந்தேதி ரிஷிவந்தியம் வட்டார வள மையத்திலும், 29- ந்தேதி தியாக துருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 30- ந்தேதி திருநாவலூர் வட்டார வள மையத்திலும், 31- ந்தேதி உளுந்தூர் பேட்டை வட்டார வள மையத்திலும், செப்டம்பர் 1- ந் தேதி சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் 5- ந் தேதி கல்வராயன் மலை கரியலூர் டேனிஸ் மிஷன் ஆரம்பபள்ளியிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

    இவ்வாறு மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுவதால் வியாழக்கிழமை தோறும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் நடைபெறும். முகாம் இன்று மற்றும் 31-ந்தேதி 2 நாட்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் செப்டம்பர் மாதம் 7- ந்தேதி அன்று வழக்கம்போல் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் இந்த சிறப்பு முகாமில் இது நாள் வரை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    • வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோட்டப்பா டியில் இருந்து நைனார் பாளையத்திற்கு சென்றார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது 54). மரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோட்டப்பா டியில் இருந்து நைனார் பாளையத்திற்கு சென்றார். பின்னர் தோட்டப்பா டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல வி. கிருஷ்ணாபுரம் பால் சொசைட்டி அருகே வேப்பூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்புறமாக வடமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே வடமலை உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் வடமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி னார்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுக்கா அரியலூர் அரசு பள்ளியில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஒன்று திரண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி னார். இது பற்றி தகவலறி ந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செ யலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமானவசந்தம் கார்த்திகேயன் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் .

    நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே மாணவர்களாகிய நீங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்றார். அதனை ஏற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், கட்சி நிர்வாகிகள் அண்ணா துரை, லிங்கநாதன், பத்மநா பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • போலீசார் கள்ளிப்பட்டு பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
    • 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கள்ளிப்பட்டு பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகில் அதே கிராமத்தை சேர்ந்த முத்துசாமி(45) சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார்அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • ஏழுமலை மனைவி பாஞ்சாலை என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மனைவி பாஞ்சாலை என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளையபெருமாளின் மனைவி மணிமேகலை, சம்பவத்தன்று பாஞ்சாலை யிடம் வீட்டுமனை சம்பந்தமாக பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது பாஞ்சாலை அவரது மகன்கள் முருகன், அன்பழகன், சிவா ஆகியோர் சேர்ந்து மணிமேகலை மற்றும் அவரது கணவர் இளையபெருமாளை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் காயமடைந்த மணிமேகலை, இளைய பெருமாள் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பழகன் (25) என்பவரை கைது செய்தனர்.

    • ஏழுமலை அதே பகுதியைச் சேர்ந்த பத்ரிநாராயணன் என்பவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42) விவசாயி, இவரது மகன் செல்வம் (15) மாற்றுத்திறனாளி, இவர் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது வழியில் மாடு கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை அதே பகுதியைச் சேர்ந்த பத்ரிநாராயணன் (43) என்பவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ஏழுமலை, அவரது தம்பி சரவணன், மற்றும் சரவணன் மனைவி சுகந்தி ஆகியோர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து ஏழுமலை தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பத்ரிநாராயணன், மணிரத்தினம், கண்ணன், மணி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மணிரத்தினம் மற்றும் பத்ரி நாராயணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    இதே போல் பத்ரி நாராயணன் தனது வீட்டிற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்ததாக கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, அவரது மனைவி ரேவதி, உறவினர்கள் சரவணன், சுகந்தி, கலைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், அம்சா, சடையன்குளத்தைச் சேர்ந்த கோவிந்தன், சுமதி, வீரமங்கலத்தைச் சேர்ந்த வீரப்பன், தியாகதுருகத்தைச் சேர்ந்த பவுனாம்பாள், பாரதி, மணிவேல், சாந்தி ஆகிய 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    ×