search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரிக்கு வந்த வடநாட்டு சுற்றுலா பயணி திடீர் மாயம்
    X

    மாயமான கோகுல் நந்தா ஜோஷி

    கன்னியாகுமரிக்கு வந்த வடநாட்டு சுற்றுலா பயணி திடீர் மாயம்

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பிறகு அவரை காணவில்லை
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வட மாநில சுற்றுலா பயணியை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    ஒடிசா மாநிலம் சுந்தர்கட் பிரமின்படா பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் நந்தா ஜோஷி (வயது 85).

    இவர் தனது மகள் ஆர்த்தி ஜோஷி (67) என்பவ ருடன் கன்னியாகுமரிக்கு கடந்த 27-ந்தேதி சுற்றுலா வந்தார். பின்னர் இவர்கள் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்து கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர்.

    மறுநாள் (28-ந்தேதி) காலையில் இவர் தனது மகளுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார். அதன் பிறகு அவரை காண வில்லை என்று கூறப்ப டுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் அவரை பல இடங்க ளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    உடனே இது பற்றி அவரது மகள் கன்னியா குமரி போலீசில் காணா மல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்து உள்ளார்.

    அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வட மாநில சுற்றுலா பயணியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×