என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
- தேரோட்டத்தை தொடர்ந்து பகல் 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- 9 மணிக்கு சுவாமி திருவீதி உலா மற்றும் சப்தவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தின் குருவாயூர் என அழைக்கப்படுவது நாகர்கோவில், கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரி சையாக கொண்டாடப்படு வது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா, கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள், வீதி உலா நடைபெற்று வந்தன. மாலையில் சமய சொற்பொழிவுகள், இன்னிசை விருதுகள் போன்றவையும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை விமரிசையாக நடைபெற்றது. காலையில் சிறப்பு ஆராதனைக்கு பிறகு சுவாமி, தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்தை தொடர்ந்து பகல் 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு இன்னிசை விருந்து நிகழ்ச்சியும், 9 மணிக்கு சுவாமி திருவீதி உலா மற்றும் சப்தவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.
நாளை (வெள்ளிக் கிழமை) 10-ம் நாள் திருவிழா நடைபெறு கிறது. காலை 11 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், சிறப்பு பஞ்சாரி மேளம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதன்பிறகு மாலை 5 மணிக்கு அலங்கார குதிரை பவனி நிகழ்ச்சி, விளக்கு ஆட்டம், அன்ன ஆட்டம் ஆகியவை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்