search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மண்டைக்காடு புதூரில் மீனவர் தற்கொலை
    X

    மண்டைக்காடு புதூரில் மீனவர் தற்கொலை

    • மனைவி மரணத்தின் வேதனை மற்றும் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு புதூரைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 85). இவர் மகன் ஜாண் பீட்டருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வின்சென்ட் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 4 முறை அறுவை சிகிச்சை செய்தும் நோய் குறையவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வின்சென்ட் மனைவி இறந்து விட்டார். மனைவி மரணத்தின் வேதனை மற்றும் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வின்சென்ட் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகன் ஜாண்பீட்டர் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×