என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் அன்னாசி பழம் விலை 'கிடு கிடு' உயர்வு

- ஒரு ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரிட ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
- நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் வந்து அன்னாசியை வாங்கிச் செல்கிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களில் முன்பு ஊடுபயிராக வாழைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தன.
ஆனால் இப்போது ரப்பர் தோட்டத்தில் ஊடு பயிரின் இடத்தை அன்னாசி செடிகள் பிடித்து விட்டன. ரப்பர் மரத்தை 25 ஆண்டுகள் வளர்த்து விட்டு அதை வெட்டிவிட்டு புதிய ரப்பர் செடிகள் நடுவார்கள். அது ரப்பர் மரமாகி பால் வெட்டுவதற்கு சுமார 7 வருடங்கள் ஆகும்.
இந்த இடைப்பட்ட காலங் களில் ரப்பர் தோட்டங்களில் ஊடு பயிராக அன்னாசியைப் பயிரிட குத்தகைக்கு வழங்கு வார்கள். இதில் இரண்டு வகையான லாபம் தோட் டத்துக்கு உரிமையாளருக்கு கிடைக்கிறது. குத்தகைப் பணம் மற்றும் ரப்பர் செடிகள் பராமரிப்பு இலவசமாகக் கிடைக்கும்.
அன்னாசியை பொறுத்த வரை குறுகிய காலத்திலேயே பலன் தரும். ஒரு ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரிட ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். செடிக்கு செடி ஒன்றரை அடி, வரிசைக்கு ஒன்றரை அடி என்று இடைவெளி விட்டு நட வேண்டும். இப்படி பத்து அடி வரிசை நடவு செய்த பிறகு ரெண்டு அடி இடை வெளி விட்டு அடுத்த வரிசையை நட வேண்டும். ஒரு வருடத்தில் காய் நன்கு பழமாகும் தருவாய் வந்ததும் காய்களை பறித்து சந்தையில் விற்கலாம்.
இப்போது கோடை காலம் என்பதால் மார்க் கெட்டில் அன்னாசி யின் தேவை அதிகமாக இருப்ப தால் பெரும்பாலும் வியா பாரிகள் தோட்டத்துக்கு வந்தே அன்னாசிப்பழங் களை வாங்கி செல்கிறார்கள். இரண்டு வருடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 டன் அன்னாசி பழம் கிடைக்கும். கடந்த ஆண்டு துவக்கத்தில் இருபது ரூபாய்க்கும் கீழ் அன்னாசியின் விலை இருந்தது. இப்போது கிலோ வுக்கு 53 ரூபாய் கிடைக்கிறது.
இது குறித்து அருவிக்க ரையைச்சேர்ந்த அன்னாசி பழ விவசாயி ராதாகிருஷ் ணன் கூறியதாவது;-
கடந்த பத்து ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டதில் அன்னாசிப்பழங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. பத்தாயிரம் ஏக்கர் நிலப்ப ரப்புக்கு மேல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசி சாகுபடி நடக்கிறது. இங்கி ருந்து சென்னை, விஜய வாடா, பெங்களூரு, மராட் டியம் உட்பட அனைத்து பகுதிகளிலும் அன்னாசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒரு அன்னாசி அரை கிலோவில் இருந்து இரண்டரை கிலோ வரை சராசரி எடை கொண்டதாக இருக்கும். தற்போது அன்னாசி பழம் கிலோவிற்கு 53 ரூபாய் மார்க்கெட் விலை உள்ளது. பச்சை காய் என்றால் 46 ரூபாய் விலை போகிறது.
எங்களிடம் இருந்து அன்னாசியை வாங்கும் வியாபாரிகள் அன்னாசியை ஏ, பி, சி என அன்னாசியின் அளவை கணக்கிட்டு தரம் பிரிக்கிறார்கள். இதனால் கடைகளில் தற்போது கிலோவிற்கு 60 முதல் 80 ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து பொதுமக்கள் வாங்க வேண்டியிருக்கும். கொரோனா காலத்தில் ரப்பர் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் அதிகரித் துள்ளனர். இதனால் அவர்கள் அன்னாசிபழங்களை விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆகவே அன்னாசியின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் தோட்டங்களுக்கு வந்து அன்னாசியை வாங்கிச் செல்கிறார்கள். நாளுக்கு நாள் குமரிமாவட்டத்தில் அன்னாசி சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்து வருகிறது.