search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் ரூ.25 லட்சம் செலவில் சாலை சீரமைக்கும் பணி - மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    X

    நாகர்கோவிலில் ரூ.25 லட்சம் செலவில் சாலை சீரமைக்கும் பணி - மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    • 47, 42-வது வார்டு பகுதியில் புனித மிக்கேல் பள்ளி சாலையை ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி
    • எஸ்.எல்.பி. அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 699 மாணவ-மாணவி களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை மேயர் மகேஷ் வழங்கினார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 47, 42-வது வார்டு பகுதியில் புனித மிக்கேல் பள்ளி சாலையை ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணியை மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து எஸ்.எல்.பி. அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 699 மாணவ-மாணவி களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை மேயர் மகேஷ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் ஜெனிதா, ஸ்டாலின் பிர காஷ், மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×