search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அபாய சங்கிலியை பிடித்து இழுத்து திப்ரூகர் ரெயிலை நிறுத்திய பயணிகள்
    X

    அபாய சங்கிலியை பிடித்து இழுத்து திப்ரூகர் ரெயிலை நிறுத்திய பயணிகள்

    • ரெயில் மாறி ஏறியதால் சம்பவம்
    • நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக திப்ரூகருக்கு விவேக் எக்ஸ் பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து வாரத்தில் திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமை களில் இயக்கப்படுகிறது.

    மாலை 5.20 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு 5.45 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடையும். நேற்று இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து சிறிது தாமதமாக புறப்பட்டது. நாகர்கோவி லுக்கு மாலை 6.05 மணிக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோ வில் ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் ரெயில் வந்ததால் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயி லுக்காக காத்திருந்த பயணி கள் சிலர் திப்ரூகர் ரெயிலில் ஏறினார்கள்.

    ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரெயிலில் ஏறிய பயணிகளில் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து ரெயி லில் ஏறிய பயணிகள் அந்த ரெயிலில் இருந்து இறங்கி னார்கள். இதைத்தொடர்ந்து ரெயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட னர். ஆனால் யார் என்று தெரியவில்லை. இதைத்தொ டர்ந்து ரெயில் 10 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. கன்னியா குமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் மாலை 6 மணிக்கு நாகர்கோ வில் முதலாவது பிளாட்பா ரத்தில் வந்து சேரும். நேற்று திப்ரூகர் ரெயில் தாமதமாக வந்ததால் கன்னியாகுமரி ரெயில் என்று நினைத்து பயணி கள் ரெயில் பெட் டிக்குள் ஏறி உள்ளனர்.

    ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் தான் திப்ரூகர் ரெயில் என்பதை உணர்ந்த பயணிகள் ரெயிலை விட்டு கீழே இறங்கி உள்ளனர். இதற்கு முறையான அறி விப்பு இல்லாத காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரெயி லும் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வரக்கூடிய நேரத்தில் சிறிது வித்திய சம்தான் உள்ளது. 2 ரெயில் களும் முதலாவது பிளாட்பா ரத்திலேயே வந்து செல் கின்றன. இதனால் பயணிகள் சிலர் ரெயிலில் உள்ள அறிவிப்பை கவனிக்கா மல் ஏறி விடுகிறார்கள். இதை சரி செய்வதற்கு மாற்று ஏற்பாடுகள் ஏதாவது செய்ய வேண்டும் என்றனர்.

    Next Story
    ×