search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாரம் மூத்தார்குளம் சீரமைக்கும் பணி
    X

    கொட்டாரம் மூத்தார்குளம் சீரமைக்கும் பணி

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்துவதற்கு இயலாத நிலை இருந்து வந்தது

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் பேரூராட் சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியில் மூத்தார்குளம் உள்ளது. இந்த குளம் பொதுமக்கள் குளிப்பதற்கா கவும் விவசாய பாசனத்துக் காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த குளத்துக்கு தண்ணீர் வரும் மதகின் முகத்துவாரம், பொதுமக்கள் குளிப்ப தற்காக பயன்படுத்தும் படித்துறை மற்றும் மறுகால் செல்லும் பகுதி போன்றவை செடி, கொடிகளால் ஆக்கி ரமிக்கப்பட்டு குளத்தில் தண்ணீர் நிற்பதே வெளி யில் தெரியாத அளவுக்கு புதர்மண்டி கிடந்தது.

    இதனால் இந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாய பாசனத்துக்கு பயன்படுத்துவதற்கும் இயலாத நிலை இருந்து வந்தது. எனவே இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று பொதுமக்களின் நலன்கருதி கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவர் விமலா மரியநேசன் தனது சொந்த செலவில் கொட்டாரம் மூத்தார்குளத்தை சீர மைக்கும் பணியை மேற் கொண்டார். இந்த குளத்தை சீர மைக்கும் பணியை அகஸ் தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ் வரம் ஒன்றிய தி.மு.க. பிரதிநிதி மரியநேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×