search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கல் அருகே மாற்றுத்திறனாளி வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    கருங்கல் அருகே மாற்றுத்திறனாளி வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    • பாலூர் குளத்தையொட்டி உள்ள வாய்க்கால் கரையில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார்
    • பொதுமக்கள் வீட்டை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி பல வருடங்களாக குடியிருந்து வரும் மாற்றுத்திறனாளி வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கருங்கல் அருகே உள்ள பாலூர் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 57). மாற்றுத்திறனாளியான இவர் ஒரு சமூக சேவகர். இவர் கிள்ளியூர் பேரூராட்சி முன்னாள் உறுப்பினராவார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவர் பாலூர் குளத்தையொட்டி உள்ள வாய்க்கால் கரையில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார்.இன்று காலை திடீரென வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருங்கல் போலீசாருடன் வந்து வீட்டை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.

    தகவல் அறிந்து வந்த மாநில வணிகர் சங்க துணைத்தலைவர் கருங்கல் ஜார்ஜ், இந்து முன்னணி கிள்ளியூர் ஒன்றிய தலைவர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் வீட்டை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.பின்னர் அங்கு வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், பாலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், கருங்கல் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர் மகேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கடையில் இருந்து துவங்கி அனைத்து சாலையோர ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் மட்டுமே இந்த மாற்றுத்திறனாளி வீட்டை இடிக்க அனுமதிப்போம். என்றும் தனியாக இந்த வீட்டை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் பொதுமக்கள் உறுதியாக கூறினர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் வேறுவழியின்றி அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×