search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிருஷ்ணகிரி ஆவின், ராயக்கோட்டை மேம்பாலங்கள் உட்பகுதியில் பூங்கா அமைக்கப்படும்
    X

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம் கலுகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களிடையே கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கிருஷ்ணகிரி ஆவின், ராயக்கோட்டை மேம்பாலங்கள் உட்பகுதியில் பூங்கா அமைக்கப்படும்

    • அங்கன்வாடி மைத்திற்கு வருகை தரும் குழந்தைகள் உரிய நேரத்திற்கு வருகை தருவதை உறுதி செய்யவேண்டும்.
    • கற்றல் திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம், சேலம் ஆவின் மேம்பாலம் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    ஆவின் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலங்களில் உட்பகுதி மற்றும் சுவர் பகுதிகளில் புதிய வர்ணம் அழகுப்படுத்திட வேண்டும். மேம்பாலம் கீழ் பகுதியில் பூங்காக்கள், மின்விளக்குகள் புதியதாக அமைக்கப்படும்.

    இப்பணிகள் அனைத்தும் மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கு போக்குவரத்து சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, மேல்கரடிகுறி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வருகை பதிவேடு, குடிநீர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, சத்துமாவு, குழந்தைகளின் எடை மற்றும் ஆகியவற்றை பார்வையிட்டு அங்கன்வாடி மைத்திற்கு வருகை தரும் குழந்தைகள் உரிய நேரத்திற்கு வருகை தருவதை உறுதி செய்யவேண்டும், மையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேடு, கற்றல்திறனை ஆய்வு மேற்கொண்டு கற்றல் திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    பின்னர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு அனைத்து வீடுகளுக்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்கின்றதா என்பதை பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வேடியப்பன், தேசிய நெடுஞ் சாலைத்துறை (பராமரிப்பு மற்றும் கட்டுமானம்) திட்ட இயக்குனர் அதிபதி, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன், உதவிக் கோட்டப்பொறியாளர் ஜெயகுமார், கலெக்டர் அலுவலக மேலாளர்(நீதியியல்) வெங்கடேசன், தாசில்தார் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×