search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    வாடிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    • அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • முடிவில் பேரூர்பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர்அ.தி.மு.க. சார்பாக பொதுச் செயலாளராக தேர்வு செய்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனி யன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் லட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சூர்யா, பிரியதர்ஷினி, வெங்க டேஸ்வரி, பஞ்சவர்ணம், கீதா சரவ ணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் துணைச்செயலாளர் சந்தன துரை வரவேற்றார்.

    இந்த விழாவில் மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொது மக்களுக்கும், நிர்வாகி களுக்கும் இனிப்பு வழங்கினார். இதில் எம்.ஜி.ஆர். மன்ற பேரூர் செயலாளர் முத்து கண்ணன், வார்டு செயலாளர்கள் கோட்டையன், திருப்பதி, பாரத் சங்கு, ரங்கராஜ், வில்லி, பிரேம், பாண்டி, அழகர், ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பேரூர்பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×