search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடை ஊழியர்கள் மோதல்
    X

    கடை ஊழியர்கள் மோதல்

    • கடை ஊழியர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
    • விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினி கணேசனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது51). இவர் சுவாமி சன்னதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து கடையில் முருகன்(45) என்பவர் வேலை பார்த்து வருகிறார். 2 பேருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட ஆத்திரமடைந்த முருகன், மாரியப்பனை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

    கான்பாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் வேங்கையன்(52). இவர் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிக்கு மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் ரஜினி கணேசன்(30), சுகுமார் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேங்கையன் சமரசம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரமடைந்த ரஜினி கணேசன் அவரை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினி கணேசனை கைது செய்தனர்.

    Next Story
    ×