என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி
    X

    மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி

    • காலை உணவு திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • இவர்களுக்கான பயிற்சி கள்ளிக்குடி வட்டார மேலாண்மை அலுவலகத்தில் நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உணவு சமைக்கும் பணியை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் ஒரு பள்ளிக்கு 3 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவர்களுக்கான பயிற்சி கள்ளிக்குடி வட்டார மேலாண்மை அலுவலகத்தில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தர்மராஜ், வடிவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மேலாளர் வெற்றி விநாயகம், ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தமீனா, பஞ்சவர்ணம், அழகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×