என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் முகாமிட்டுள்ள மலபார் அணில்கள்
- பழவியாபாரியிடம் சீத்தாப்பழம் வாங்கி ருசிக்கிறது
- சுற்றுலா பயணிகள் செல்போனில் புகைப்படம் எடுத்து உற்சாகம்
அருவங்காடு,
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப் பகுதியில் மட்டும் காணப்படுகிறது மலபார் அணில்.
இந்த அணில்கள் நீலகிரி, கேரளா, களக்காடு, உடுமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே காண முடியும். அணில் வகையிலேயே உருவத்தில் மிகப்பெரியதாகவும் மற்றும் அழிந்து வரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதனை பராமரித்து பாதுகாப்பாக வைக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இந்த வகை அணில்கள் முகாமிட்டுள்ளது. 100 ஆண்டு கால பழமை வாய்ந்த வானுயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் இந்த பூங்காவில் அதிகளவில் உள்ளன.
இதன் காரணமாக மலபார் அணில்கள் இங்கு சுற்றி திரிகின்றன. அவ்வப்போது வெளியில் வந்து சுற்றுலா பயணிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி செல்கின்றன.
சுற்றுலா பயணிகள் அணில்களை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொள்கின்றனர்.
தற்போது, மலபார் அணில்கள், பூங்கா நுழைவு வாயில் முன்புள்ள பழக்கடைக்கு வந்து அங்கு வைத்திருக்க கூடிய பழங்களை ருசித்து செல்கிறது.
குறிப்பாக இங்கு பழக்கடை நடத்தி வரும் கமலா என்ற பெண்ணிடம் அவர் கடை திறக்கும் வரை காத்திருந்து அணிலுக்கு பிடித்த சீதா பழங்களை அவர் கைகளால் வாங்கி அணில்கள் ருசித்து செல்கின்றனர். இதுசுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்து உள்ளது. அவர்கள் அதனை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்