என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மத்தூர் அரசு பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மத்தூர் அரசு பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/16/1933359-independanceday2023-1-9.webp)
மத்தூர் அரசு பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
- விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சக்தி சாந்தகுமார், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் பார்தீபன், ராமன் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் வாசுதேவன் தலைமையில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் கணேசகுமார், முனுசாமி கவுண்டர், மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் குணவ சந்தரசு, ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்வின்தாஜ், சலீம், சந்தூர் முரளி, ஊறுகாய் தொழிற்சாலையின் உரிமையாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவினை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
அதேபோல் முதலிடை பருவத் தேர்வு கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சக்தி சாந்தகுமார், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் பார்தீபன், ராமன் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உதவியாசிரியர்கள் சின்னதுரை, சின்னராஜ், ரவி, சபாபதி உடற்கல்வி ஆசிரியர் சிவசந்திரன், முருகன், சக்திவேல், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தொழில் கல்வி ஆசிரியர் நன்றி கூறினார்.