search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
    • சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

    சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார்.

    முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் கட்டளை தந்திரம் ஸ்ரீமத் திருநாவுக்கரசு சுவாமிகள், சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதர்சுவாமி, செல்வ முத்துக்குமார சுவாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் ஆகிய சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல். ஏ, அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்மற்றும் ஏராளமான அதிமுகவினர்கள் உடன் இருந்தனர்.

    • பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
    • மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் இந்த கிராம கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 1அடி நீளமும், 6 இன்ச் விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே டேஞ்சர் எனவும், நாட்டச் நோட்டிபை போலீஸ் என எழுதப்பட்டுள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இது குறித்து உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் அளித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர பாதுகாப்பு போலீசார் மர்ம பொருளைப் பார்வையிட்டு அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.

    • இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
    • தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சீர்காழியில் கடந்த 24 மணி நேர ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலை 9 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு பணியை தொடங்கினார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது. இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவு கொள்ளிடத்தில் தங்கினார்.

    இந்நிலையில் இன்று (1-ந்தேதி) அதிகாலையில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் கொள்ளிடம் புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் மையத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் எருக்கூர் நவீன அரிசி ஆலையில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வில் கோட்டாட்சியர் அர்ச்சனா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கண்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் மஞ்சுளா கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிஉள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வில் உடன் இருந்தனர். 

    • சிறு வயது முதலே ஓவியத்தில் நாட்டம் உள்ள மாணவி.
    • சிறுமியின் இந்த உலக சாதனை முயற்சியை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி பகுதியை சேர்ந்த ஜேக்கப் ஞானசெல்வன், எஸ்தர் இவர்களின் மகள் ஜுடித்கிப்டி, தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறு வயது முதலே ஓவியத்தில் நாட்டம் உள்ள மாணவி, நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் ஓவியத்தில் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டார். 6 x4 அளவிலான வெள்ளை ஓவிய தாளில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை மற்றும் நீலம் ஆகிய அக்ரிலிக் வண்ணங்களை பயன்படுத்தி 7500 முறை பெருவிரல் கை ரேகைகளை கொண்டு இந்திய தேசியக் கொடியை 3 மணி நேரம் 53 நிமிடங்களில் உருவாக்கி உள்ளார்.

    சிறுமியின் இந்த உலக சாதனை முயற்சியை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.
    • தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.

    சீர்காழி:

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    154-வது தொகுதியாக சீர்காழிக்கு நேற்றுவந்தார். பின்னர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது

    2024-ல் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு யாத்திரையில் பங்கேற்றுள்ளீர்கள். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நந்தனார் போன்ற மகான்கள் பிறந்த ஊரில் மகான்களின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு வந்துள்ளேன். நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த ஊர். சுதந்திர தாகம் தீட்டிய நீலகண்டபிரம்மச்சாரிக்கு ஒரு வேளை சாப்பிட உணவு இல்லை என பாரதியாரிடம் உணவுகேட்டார்.

    அப்போது முண்டாசு கவிஞர் பாரதியார் தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என நீலகண்டபிரம்மச்சாரிக்காக பாடலை பாடினார். பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.

    சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் வளாகத்தில் ஐம்பொன் சிலைகள், தமிழகத்தின் அரிதான 410, தேவார செப்பேடுகள் கிடைக்கப் பெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள். இவைகள் காலத்தின் பொக்கிஷம். கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், தேவார செப்பேடுகள் ஆகியவற்றை ஸ்ரீ சட்டை நாதர் திருக்கோவிலுக்கு உள்ளேயே தான் வைக்க வேண்டும். தவிர மியூசியத்தில் இருக்க கூடாது.

    மயிலாடுதுறையை சுற்றிலும் நவகிரக கோவில்கள், சைவ வைணவ தளங்கள் ஆன்மீகவாதிகள் குடியிருக்க கூடிய எம்பி தொகுதியாக உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவின் ஆன்மீக தலங்களாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணத்தை மாற்றி காட்டுவோம். தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார்.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் நேற்று மாலை ஆனந்தபாபுவிற்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி (வயது 48), தர்மராஜ் (25), ஜீவானந்தம் (25), மணியரசன் (35), சித்திரைவில் (43) மற்றும் தரங்கம்பாடி தாலுகா வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (34) ஆகிய 6 மீனவர்கள் திருமுல்லைவாசல் மீன்பிடி தளத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    சுமார் 20 கடல் மைல் தூரத்தில் நள்ளிரவில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பைபர் படகில் இருந்த என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் அது தீ பிடித்து எரிந்தது. அப்போது என்ஜீனில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது. மேலும் இந்த தீ பைபர் படகிலும் பிடித்து எரிந்தது.

     

    இந்த தீவிபத்தில் படகில் இருந்த மீனவர்கள் ஜீவானந்தம், மணியரசன் சித்திரைவேல் உள்ளிட்ட 6 பேரும் தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் 6 பேரும் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சக மீனவர்கள் இதனை பார்த்து உடனடியாக விரைந்து வந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் பைபர் படகு மற்றும் ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, ஐஸ்பெட்டி உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக மீனவர் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் தீ விபத்தில் சேதமான பைபர் படகையும் கரைக்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

    • 3 மணி நேரத்தில் அவர் இந்த ஓவியத்தை வரைந்தது குறிப்பிடதக்கது.
    • அஞ்சலி நிகழ்வில் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தினர்.

    சீர்காழி:

    தே.மு.தி.க. நிறுவன தலைவரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அனைத்து கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அந்த வகையில் சீர்காழி அடுத்த சட்டநாதபுரத்தை சேர்ந்த நுண்கலை நிபுணர் அரவிந்தன் (வயது 24 ) என்பவர் விஜயகாந்தின் உருவப்படத்தை தனது உடலில் இருந்து எடுத்த 3 மில்லி ரத்தத்தால் ஓவியமாக வரைந்து அஞ்சலி செலுத்தினார். 3 மணி நேரத்தில் அவர் இந்த ஓவியத்தை வரைந்தது குறிப்பிடதக்கது.

    மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தினர்.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
    • மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

    இதேபோல் சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி வர்த்தகர்கள் நல பாதுகாப்பு சங்கம் ஆகியன சார்பில் காலை 11 மணி வரை கடைகளை அடைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சீர்காழி அடுத்த மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைப்போல் குத்தாலம் பகுதியிலும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    • சந்தன கலர் பெயிண்ட் பூசப்பட்ட, சீல் இடப்பட்ட இரும்பு பெட்டி ஒன்று கரை ஒதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு நடந்து சென்றனர்.

    அப்போது கடற்கரையோரம் சுமார் ஒன்றரை அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்ட சந்தன கலர் பெயிண்ட் பூசப்பட்ட, சீல் இடப்பட்ட இரும்பு பெட்டி ஒன்று கரை ஒதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து அவர்கள் உடனடியாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சிவகுமார், கடலோர காவல் குழுமம் இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா, க்யூ பிரிவு, தனிப்பிரிவு மற்றும் சீர்காழி சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம பெட்டியை கைப்பற்றி மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் அந்த மர்ம பெட்டி எவ்வாறு அங்கு வந்தது அல்லது யாரும் கொண்டு வந்து இங்கு போட்டு விட்டு சென்றார்களா? மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம பெட்டியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • குடிநீர் விற்பனை நிறுவனத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.
    • மினி லாரியில் ஏற்றப்பட்டிருந்த தண்ணீர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடாமல் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகரம் தருமபுரம் சாலையில் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்துவரும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களிலும், 20 லிட்டர் கேன்களிலும் மயிலாடுதுறை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கச்சேரி சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் பொதுமக்கள் வாங்கிய அந்த நிறுவனத்தை சேர்ந்த குடிநீர் கேனில் உயிருடன் தவளை இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த மளிகை கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த தண்ணீர் கேனின் மூடி பிரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மேலும் கேனில் தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மினி லாரியில் ஏற்றப்பட்டிருந்த தண்ணீர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடாமல் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது.

    மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தவளை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தண்ணீர் நிரப்பப்படாத கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் தவளை உள்ளே நுழைந்து இருக்கக்கூடும் என்று கூறிய அலுவலர்கள் கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது காலி கேன்கள் உள்ள இடத்தில் தவளைகள், நத்தை, மரவட்டை ஆகியவை இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தண்ணீர் கேன் திறக்கபட்டு இருந்ததால் நிறுவனத்துக்கு சீல் வைக்க தற்போது நடவடிக்கை மேற்கொள்ள முடியாது எனவும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்தார்.

    • பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு வழங்கப்படும்
    • விதை உற்பத்தி குறித்த நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், திட்ட இயக்குநர் (அட்மா) வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி (விதை உற்பத்தி) என்ற தலைப்பில் வருகிற 11.12.2023 முதல் 16.12.2023 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ளது.

    வேளாண் அறிவியல் நிலைய பேராசியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்று பயிற்சியை நடத்தவுள்ளனர்.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் 18 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.

    பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தாங்களே போக்குவரத்து செலவினம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இப்பயிற்சியில் 2 நாட்கள் கண்டுணர்வு சுற்றுலா, மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு அழைத்துச் சென்று விதை உற்பத்தி குறித்த நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதில் முதல் நாள் பங்கு பெறும் விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து 6 நாட்கள் பங்கேற்க வேண்டும்.

    தொடர்ந்து விடுப்பின்றி கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மட்டும் பயிற்சியின் இறுதிநாள் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

    பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில்

    நடைபெறுகிறது.

    விதை உற்பத்தியில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்கள், விவசாயிகள் தங்களது பெயரை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு 30.11.2023க்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இத்தகவலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

    • இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
    • முகாமில் 30 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நகராட்சி மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் 300 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    77 நபர்களுக்கு கண் குறைபாடு கண்டறிப்பட்டு மேல் சிகிச்சசைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் 30 நபர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டது.

    கண் சிகிச்சை முகாமினை மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ராஜகுமார் முகாமை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை சென்ட்ரல் லயன் சங்க தலைவர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் பரமசிவம், மருத்துவர் சந்தீப் தலைமையிலான மருத்துவ குழுக்கள் பரிசோதனை செய்தனர்.

    இதில் சென்ட்ரல் லயன் சங்க செயலர். மோகன்ராஜ் மற்றும் பொருளாளர் லயன்ஸ் மகாவீன் சந்த் ஜெயின், குரு.ராகவேந்திரன், கலியமூர்த்தி, சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் தலைவர் வேல்விழி, செயலாளர் மகாலட்சுமி, மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

    ×