search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரோம்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு
    X

    குரோம்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு

    • மனுக்களுக்கு உடடினயாக தீர்வு காணப்பட்டது.
    • தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர், ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார். மனுக்களுக்கு உடடினயாக தீர்வு காணப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாற்று திறனாளி 2 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தொழில் கடன் உதவி, குடியிருப்பு வீட்டிற்கான கிரையபத்திரம் பெயர் மாற்றம், பெயர் திருத்துதல், சொத்து வரி உட்பட 100 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்அருண்ராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ. கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×