search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமரங்களை அழித்த மர்ம நபர்கள்
    X

    மாமரங்களை அழித்த மர்ம நபர்கள்

    • கிருஷ்ணகிரி அருகே மாமரங்களை வெட்டி அழித்த மர்ம நபர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் விசாரணை

    சின்னகுட்டை கிராமத்தை விவசாயிகள் கலெக்டரை சந்தித்து கொ டுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அணைக்கு நிலம் கொடுத்தவர் விவசா யிகள் ஒரு தரப்பினர், அகரம் அருகே சின்ன குட்டையில மலை கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் அணைக்கு நிலம் கொடுத்த தற்காக, வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயிகள் மரக்கன்றுகள் வைத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்து றையினர் என கூறி கொண்டு மர்ம நபர்கள் 3 பேர், மாந்தோட்டத்தில் இருந்த 30 மரங்களை வெட்டி அழித்துள்ளனர். ஏற்கனவே நாங்கள் விவசா யம் செய்யும் நிலத்திற்கு பட்டா வழங்காமல் காலதா மதம் செய்து வரும் நிலை யில், தற்போது எங்களது தோட்டத்தை அழித்து, எங்களை அங்கிருந்து வெளியேற்றிட திட்டமிட் டுள்ளனர்.

    எனவே, மாமரங்களை வெட்டி அழித்த மர்ம நபர்கள் 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×