search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குமாரபாளையத்தில் பயணியர் நிழற்கூடம் அமைக்க கோரி மனு
    X

    குமாரபாளையத்தில் பயணியர் நிழற்கூடம் அமைக்க கோரி மனு

    • பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்கூடம் இல்லததால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாணவ மாணவிகள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது.
    • நிழற்கூடம் வேண்டி மாவட்ட கலெக்டரிடமும், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடமும் மனு கொடுக்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்கூடம் இல்லததால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாணவ மாணவிகள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி பள்ளிப்பாளையம் பிரிவு,

    ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் நிறுத்தம் ஆகிய இடங்களில் பயணியர் நிழற்கூடமும் அமா்வதற்கு இருக்கைகளும் அமைத்துக் கொடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் மயகளிர் மற்றும் குழந்தைகள் நலஅணி நகர அமைப்பாளர் சித்ராபாபு மாவட்ட கலெக்டரிடமும், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடமும் மனு வழங்கினார்.

    Next Story
    ×