search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசிய காட்சி.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    • ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
    • ஒரு பூத்திற்கு 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரம சிவன், ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. சவுந்தர ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராய ணன், மாவட்ட ஜெய லலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செய லாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பெரிய பெருமாள், மாவட்ட மகளிரணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத் துரை, வக்கீல் ஜெனி, சண்முககுமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துக் குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஒரு பூத்திற்கு 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அதில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம்பெற வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும். நெல்லை மாவட்ட மாநகரத்தில் பழு தடைந்துள்ள சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.

    Next Story
    ×