search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 4-வது நாளாக உடலை வாங்க பெற்றோர் மறுப்பு
    X

    வசுமதி

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 4-வது நாளாக உடலை வாங்க பெற்றோர் மறுப்பு

    • நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது. கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த 30-தேதி வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவரது மூத்த மகள் வசுமதி (23). என்ஜினீயர்.

    இவருக்கும், நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது.இந்த நிலையில் வசுமதியிடம் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை

    இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள

    பெற்றோர் வீட்டில் கடந்த

    30-தேதி வீட்டில்தூ க்குப்போட்டு தற்கொ லைக்கு முயன்றார்.

    சேலம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 9-ந்தேதி சிகிச்சை பலனின்றி வசுமதி பரிதாப மாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கணவர் வினோத் ,மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை , தற்ெகாலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்ததும் 4 பேரும் தலைமறைவாகினர்.

    உடலை வாங்க மறுப்பு

    இதனிடையே அவர்கள் 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே வசுமதியின் உடலை வாங்குவோம் என கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள், சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு உடலை வாங்க மறுத்து கடந்த 9-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.இதனை தொடர்ந்து திருச்செங்கோடு டவுன் போலீசார் நேற்று மல்ல சமுத்திரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வசுமதியின் கணவர் வினோத்தை அதிரடியாக கைது ெசய்தனர். அவரிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இருப்பி

    னும் இன்று 4-வது நாளாக

    உடலை வாங்க மறுத்து வசுமதியில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள

    னர். மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோ தரி காவியா ஆகியோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என கூறி வருகின்றனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.இதனால் 4-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது .

    Next Story
    ×