என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கே சித்தர் பீடத்தில் பௌர்ணமி யாகம் நடந்தது.
காங்கேய சித்தர் பீடத்தில் பவுர்ணமி யாகம்
- பவுர்ணமி தினத்தன்று சிறப்பாக வேள்வியும், அபிஷேகமும் நடைபெற்றது.
- மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகள்.
நாகப்பட்டினம்:
நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேய சித்தர் ஜீவப்பீடத்தில் மாதம் தோறும் பௌர்ணமி யாகமானது தமிழ் முறைப்படி சித்தர் பீடத்தை நிர்வகித்து வரும் நாகூர் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
இந்த பௌர்ணமி தினத்தன்று மிகச் சிறப்பாக வேள்வியும், அபிஷேக ஆராதனை களும் நடைபெற்றது.நாகூர், காரைக்கால் திருத்துறைப்பூண்டியை சார்ந்த பக்தர்கள் இந்த வேள்வியில் கலந்து கொண்டார்கள் அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டது
இந்த வேள்வியினை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையைச் சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், டாக்டர் அனிதா, குமார், பழனிவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்
இந்த பூஜையினை கும்பகோணத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் காங்கேய சித்தர் பீடத்தின் அர்ச்சகர் வெங்கட்ராமன் ஆகியோர் பூஜையை செய்தார்கள். வருகின்ற மார்கழி மாதம் முழுவதும் காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் அதிகாலையில் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கின்றது.