என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி, கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க கோரி ஜூன் 20-ந்தேதி சென்னையில் பேரணி
- யோகா ஆசிரியர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழரத வீதி பதஞ்சலி யோகா மையத்தில் நடைபெற்றது.
- சுகாரார நிலையத்தில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.
கடலூர்:
தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரி யர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழரத வீதி பதஞ்சலி யோகா மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயாளர் காசிநாத துரை தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர வடிவேல், சுந்தரராஜன், கென்னடி, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ராதா, ஹெலன், மயிலாடு துறை மாவட்ட பொறுப் பாளர்கள் திருமுருகன், மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பின்னர் மாநில பொதுச் செயலாளர் காசிநாததுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரி. அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆகியவற்றில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சி யாளர்களை இந்த கல்வி ஆண்டிலேயே நியமிக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாரார நிலையத்தில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றி தர வலியுறுத்தி வருகின்ற ஜூன் 20-ந்தேதி சென்னை யில் மாபெரும் பேரணி நடந்த திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்