என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![செஸ் போட்டிகளில் சாதனை படைத்த ஓசூர் மாணவிகளுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. பாராட்டு செஸ் போட்டிகளில் சாதனை படைத்த ஓசூர் மாணவிகளுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. பாராட்டு](https://media.maalaimalar.com/h-upload/2022/07/31/1738901-003.jpg)
செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பிரகாஷ் எம்.எல்.ஏ. பாராட்டியபோது எடுத்த படம்.
செஸ் போட்டிகளில் சாதனை படைத்த ஓசூர் மாணவிகளுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. பாராட்டு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாசை, சிராவணி மற்றும் சிவசாம்பவி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- சிறப்பு விமானத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுடன் பயணம் செய்த அரசு பள்ளி மாணவர்களில் சிராவணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள ஜொனபண்டா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்-குணவதி தம்பதியரின் மகள்கள் சிராவணி மற்றும் சிவசாம்பவி.
இவர்களில் சிராவணி அரசு பள்ளியில் 9-வது வகுப்பும், சிவசாம்பவி 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் செஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
சிராவணி 4-ம் வகுப்பு முதல் 11- வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்குகொண்டு விளையாடி தொடர்ந்து பல்வேறு போட்டிகளிலும், மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளையும், பதக்கங்களையும் குவித்துள்ளார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட பிரதிநிதியாகவும் அவர் கலந்துகொண்டார். மேலும், செஸ் ஒலிம்பியாட் சிறப்பு விமானத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுடன் பயணம் செய்த அரசு பள்ளி மாணவர்களில் சிராவணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாசை, சிராவணி மற்றும் சிவசாம்பவி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள் இருவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், மாநில, தேசிய, சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி சாதனை புரிய வேண்டும், அதற்கு தமிழக அரசு மூலம் உரிய உதவிகளை ஏற்பாடு செய்து தருவதாக பிரகாஷ் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, பூனப்பள்ளி தி.மு.க. கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா, டாண்டா அமைப்பின் மாநில தலைவர் பிரகாஷ், வேணு மற்றும் மாணவிகளின் ஆசிரியர் வினோத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.