search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் தண்ணீர் திறப்பால்   நிரம்பி வழியும் தருமபுரி மாவட்ட கே.ஈச்சம்பாடி அணை
    X

    கே.ஈச்சம்பாடி அணையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி. 

    கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் தண்ணீர் திறப்பால் நிரம்பி வழியும் தருமபுரி மாவட்ட கே.ஈச்சம்பாடி அணை

    • தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • 1 மாதத்திற்கு மேலாக ஆற்றில் தண்ணீர் செல்வதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள நவலை, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி,

    கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திரு வண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் கெலவரப்பள்ளி அணை, கே.ஆர்.பி அணை மற்றும் சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு மழையின்றி வறண்டு காணப்பட்டது.

    தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைகள் நிரம்பி வழிந்தோடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 8000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து வினாடிக்கு சுமார் 20,478 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 17,478 கன அடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.

    இந்நிலையில் தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24478 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து அணைக்கட்டு நிரம்பி, தண்ணீர் வழிந்தோடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து 1 மாதத்திற்கு மேலாக ஆற்றில் தண்ணீர் செல்வதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள நவலை, பெரமாண்டப்பட்டி, தொட்டம்பட்டி, எம்.வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வரவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×