search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் தாதகாப்பட்டியில் இளம்பெண் திடீர் மாயம்
    X

    சேலம் தாதகாப்பட்டியில் இளம்பெண் திடீர் மாயம்

    • சேலம் தாதகாப்பட்டி, தாகூர் தெரு பகுதியில் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சினைகள் இருந்து வந்ததால், பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் வீட்டிலிருந்த அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் ஆர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி, தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் ஆர்த்தி (வயது 20). பட்டதாரியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சினைகள் இருந்து வந்ததால், பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்த அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் ஆர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து

    அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்ன தானப்பட்டி போலீசார் மாயமான ஆர்த்தியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×