என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் டவுன் ரெயில் நிலையத்தில்அழுகிய நிலையில் ஆண் பிணம்

- டவுன் ெரயில் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்னை மார்க்கமாகவும், விருதாசலம் மார்க்கமாகவும் செல்லும் ரெயில்களில் பயணிக்கின்றனர்.
- இந்த நிலையில் ெரயில்வே நிலைய கழிவறை அருகே ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் முள்ளுவாடிகேட் அருகே உள்ள டவுன் ெரயில் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்னை மார்க்கமாகவும், விருதாசலம் மார்க்கமாகவும் செல்லும் ரெயில்களில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் ெரயில்வே நிலைய கழிவறை அருகே ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது பற்றி நிலைய அதிகாரிகள் டவுன் போலீசாருக்கும், சேலம் ெரயில்வே பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து ெரயில்வே போலீசார், டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணா பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் .
அழுகிய நிலையில் காணப்பட்ட நபர் வயது 45 இருக்கலாம் எனவும், அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
ரெயில் நிலையம் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது வாங்கி குடித்துவிட்டு மது போதையில் அவர் உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்க ளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
எப்போதும் பரபரப்பாக காணக்கூடிய டவுன் ெரயில் நிலையத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.