என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/18/1900433-5.webp)
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகி யுள்ளது.
- இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம்:
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகி யுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்க ளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழையும் பல இடங்களில் கனமழையும் பதிவாகும்.
வரும் நாட்களில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களி லும் ஓரிரு நாட்கள் மழை எதிர்பார்க்கலாம். அடுத்த 4 நாட்களை பொறுத்தவரை குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள் அதிக மழையை சந்திக்கும். இதனால் வெப்பத்தில் பிடியில் இருந்து சற்று விடுதலை கிடைக்கும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.