என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு

- தென்காசி அரசு தலைமை மருத்துவ மனையில் நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
- நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, தொகுத்து வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு,நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள், குறிப்பாக தென்காசி மாவட்ட மூத்த பொது நல மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என சுமார் 107 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, துணை இயக்குனர் சுகாதாரம் முரளி சங்கர், துணை இயக்குனர் (குடும்ப நலம்) ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் மருத்துவர்கள் அகத்தியன், மல்லிகா, மாரிமுத்து, கார்த்திகேயன், ராஜலட்சுமி, சாரதாதேவி நீரிழிவு நோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர். மேலும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் கலந்துகொண்டார்.
கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, தொகுத்து வழங்கினார். உறைவிட மருத்துவர் ராஜேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் முன்னின்று நடத்திய மருத்துவர்கள் விஜயகுமர், மல்லிகா, கார்த்திக் உள்ளிட்டோர் மற்றும் பேச்சாளர்கள், கலந்து கொண்ட மருத்து வர்கள், பணியாளர்களுக்கு நன்றி கூறினார்.